Friday, 29 May 2015

என் கண்ணில் இருட்டுத்தான்.


பதியைத் பாதையிலே
தொலைத்து நானும்
அகதியானேன்
சொந்த மண்ணில்
வீதியில்  நடப்பதெல்லாம்
விதியில் எழுதியதாய்
விரும்பாமல்
வீடு தேடிவரும்
நான்
இந்த பெயரில்
கலர்புடவை கட்டி நானும்
நெற்றிகொரு பொட்டு
குங்குமத்தில்
வைக்கின்றேன்
எனக்கு துணையாகும்
என்று!

எனக்கு மட்டும்
 தெரியவில்லை
என் துணைவன்
உயிரோடுதானா?
என்று
வீதிக்கு வந்துவிட்டேன்
 என்
விதியை எண்ணி
அழுதுவிட்டேன்

ஆனாலும்
என்ன பயன்
பொழுதுமட்டும்
சாய்ந்துவிட்டால்
பூனைகளின்
முனகல்கூட
மிரட்டும்
என்னை
துணையில்லாத
ஏக்கத்தினால்
.!.

ஏங்குகின்ற
பிள்ளைக்கு
நான்
என்ன சொல்லி
புரியவைப்பேன்
தூங்குகண்ணே...
என்று சொல்லி
விழித்திருப்பேன்...
விடியும்வரை

வீதிக்கு வந்துவிட்டேன்
 என்
விதியை எண்ணி
என்ன பயன் ?

பலருக்கு
பொழுது விடிந்தாலும்
புலருகின்ற பொழுதுகூட
என் கண்ணில்
இருட்டுத்தான்...!!!
29.05.2015


No comments:

Post a Comment