பூஜைக்கு வந்தமலரே
தட்டில் சில
பூவிருக்க
உன் கூந்தலில்
தட்டில் சில
பூவிருக்க
உன் கூந்தலில்
ஒரு பூவிருக்க
அந்த ரோஜாவை
நான் தொடர
ராஜாத்தி உன் பாதம்
ரசனையுடன்
நடை பழகக்
கல்லொன்றில்
கால் இடர
நடைவேகம்தான்
குறைய
இடைவெளியில்
இடம் மாறித்
தரை தொட்ட
உன் பூவை
நான் எடுக்க
உன் கைபட்ட
பூ என்னை
பஞ்சாகித்
தடவத்தான்
திரும்பிப் பார்க்காமல்
போகும் பூவே
உன்
பெயர் என்ன.....?
அருள் நிலா வாசன்
7.02.2015
No comments:
Post a Comment