அருள் நிலா வாசன்

விட்டுப்போன சுதந்திரம் இட்டுச் சென்ற பாதையிலிருந்து தொட்டுச் செல்லும் பதிவுகள்

Tuesday, 22 December 2015

போகட்டும் விட்டுவிடு...

முயற்சியால் முன்னுக்கு
வந்த மூத்தவன்
ஒரு முழம் கயிற்றுக்கு
என் முடிச்சிலிருந்து
உருவி எடுக்கவில்லை


என் முழு நேர உழைப்பு
மூன்றேக்கர் நிலத்தை
மூன்று விரல் மடித்து
முத்திரையில் வையென்ற
என் கையெழுத்தை
வாங்க
முன்னும் பின்னும்
ஒட்டிக் கொண்டிருந்த
மூச்சிரைக்க நீ பெத்த
இளையவனின்
முகத்தை
இருட்டில் கூட
பின்னர்
பார்க்கவும் கிடைக்கவில்லை

போகட்டும் விட்டுவிடு

உனக்கு நானும் எனக்கு நீயும்
பசி வந்தால் ருசியாக
வென்னீரும் சோறும்
வேரேன இருக்கும்
வெள்ளையம்மா நீயும்
எனக்கு வேறென்ன வேணும்...

அருள் நிலா வாசன்
23.12.2015
Posted by அருள்நிலா வாசன் at 16:32 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: கவிதை

கூடு திரும்ப.....

கூட்டை விட்டுத்
தூரமாய்ப் பறந்த
கூண்டுப் பறவைகள் கூட
குமுறிக் குமுறி
அழும் சத்தம்
கொஞ்சமாய்
கேட்கிறது....


தோட்ட வெளியெங்கும்
பாடித் திரிந்த
குயில்களின்
தேசியப் பாடல்
எங்கோ
தெளிவில்லாமல்
தூரமாய் கேட்கிறது....

நெல் மணிகளைத்
கொத்தித் திரிந்த
புலுனிக் கூட்டம்
கடந்த காலத்தைக்
கனவாய் மறந்தா
வயல்களும்
வனப்பும்
எங்கே போனதென்று
ஏக்கமாய்க் கேட்கிறது..

வேம்பாய்க் கசக்கும்
வெடிகுண்டுச் சத்தங்கள்
கேட்கப் பயந்த
தோகை மயில்கள்
ஊருக்குள் திரும்பி
வரலாமா என்று
தொலைவாய் நின்று
கேட்கிறது.....

நரியும் பரியும்
நாட்டைக் கெடுத்தாலும்
கேள்விக் குறிகளின்
பதில்கள்
எல்லையைக்
குறிக்க
தம்பட்டம்
தானாய்
அடங்கும்
அவர்கள்
அவர்களாகவும்
நாங்கள்
நாங்களாகவும்
இருக்க
இயற்கை
இயல்பாய் வரும்...

அருள் நிலா வாசன்.
22.12.2015                                           .

Posted by அருள்நிலா வாசன் at 16:27 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: கவிதை

காத்திருந்து கடைசியில்

எதிர் எதிராய்
நாம்
அமர்ந்திருந்த
ஏகாந்தப்
பொழுதுகளில்
எமக்கிடையில்
ஒழிந்திருந்த
எத்தனையோ
விடயங்கள்
இரகசியமாய்
எழுந்து
நீளக்கால் வைத்து
எட்டிக் கடந்தே
போனது...


இடைவெளியில்
என் வழியில்
ஒரு வழியாய்
குறுக்கிட்ட
அந்தப்
பொல்லாத
வியாதியில்

இப்படித்தான்
இருக்குமென்று
என் தப்பாத
கணக்கில் நின்று
நான்
இறுக்கிப் பிடித்த
கணத்தில்
இம்சை
தாங்காமல்
கழன்று விழுந்த
அந்த முகத்தை
பார்க்கவே
சகிக்கவில்லை....

ஒற்றைப் பத்திரத்தில்
இரட்டைக் கையெழுத்து
எப்போது விழுமென்று
காத்திருந்த
கலியாணம்
எங்கள்
கண்ணில்
தெரியாமலே
கும்மிருட்டில்
ஓடியே போனது....

காத்திருந்து
கடைசியில்
உன்னைக்
கடந்து போன
வண்டிக்கு
கை நீட்டி
உன்
பயணத்தை
உல்லாசமாய்
தொடர்ந்தாலும்...

உன்னைக்
கண்டிஷன் போட்ட
காதல் மீது நீ
பெட்டிசம் போட்டாலும்
அந்த கண்ணீரில்
கரைந்து போன
காதலுக்கும்
உன் முகமூடிக்
காதல்
தெரியாமல்
இல்லை....

இதுவும் உன்னைக்
கடந்து
போகும்
மெதுவாகப் போ
வழுக்கி விழுந்திடுவாய்..

அருள் நிலா வாசன்.

22.12.2015






Posted by அருள்நிலா வாசன் at 16:08 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: கவிதை

Sunday, 13 December 2015

போதை தெளிந்த பின்...

உன் போதை தெளிந்து
புனித நாளொன்று
புதிதாய் பிறக்க
வாசல் திறந்து
உனக்காய்
ஒளி கொடுத்து
எரிந்து முடியும்
இந்த மெழுகுவர்த்தியின்
கடைசி மூச்சுக்குள்
என் கடைசி ஆசை
ஒழிந்து இருக்கிறது
உனக்கு தெரியாமல்
இருக்கலாம்....


என் காதைப் பிளிந்து
உன் கவனத்தில்
கடைந்தெடுக்கும்
சில்லறை
வார்த்தைக்குள்
வாளொன்று
இல்லாமல்
வெட்டும்
உன் வாய் பேச்சில்
கல்லறைக்குள்
அடங்கத் துடிக்கும்
என் சுவாசக் காற்று...


பூங்கோதைக்குள் ஒளிந்து
நீ வெளிச்சங்களை
இழுத்து மூடி
வெட்கத்தை
களட்டித் தூர
எறிந்துவிட்டு
வெறி கொள்ளும்
உன்
வழித்தடங்கள்

என்னை
நின்று
நெறிப்படுத்துகிறது..


கரைதொட்டு உடையும்
நீர் குமிழிகளாய்
என் இதயத்தின்
விழிம்பில்
உன் நினைவுப் பூக்கள்
மௌனத்தில்
விளையாடுகிறது...


ஊற்றாகி வழிந்து
ஓடும் உன் இசையாற்றில்
இன்னும் நான் வீழ்ந்து
கிடக்கின்றேன்
பாடும் நிலாவின்
நீழும் ஒளி காண
உன் பார்வை ஓரு நாளில்
மறுபடியும்
நின்மதியைத்
தேடி வரலாம்
உன் போதை
நிரந்தரமாய் தெளிந்த பின்...


அருள் நிலா வாசன்.
13.12.2015                                             

      



Posted by அருள்நிலா வாசன் at 14:07 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: கவிதை

Thursday, 10 December 2015

காற்றுக்குத் தூதுவிட்டேன்

வாச மல்லிகையை
வளவெங்கும்
நட்டு வைத்து
அது நித்தியமாய்
என் தலையில்
மொட்டோடு
பூத்திருக்க.....


நித்தமும் உன்
பாட்டாகி
உன்பாச வலையில்
விழுந்திருக்க
வயல்
வரம்பெல்லாம்
வளர்ந்திருந்த
புல் நுனியில்
உரம் போட்ட
கையாலே
நீ தொட்டு
உரசியதால்
வழிந்தோடிய
ஸ்வரங்களுக்கு
வரிசையாய் நின்று
நடனமாடிய
நெல்லும் மணியும்...


மஞ்சலிட்ட பத்திரிகையில்
உன் பெயருக்குப்
பின்னாலே
என் பெயரும்
பதிந்ததென்று
ஊரெல்லாம்
பாடத்தான்
காற்றுக்குத்
தூதுவிட்டேன்
நீ வந்து
நிக்கிறியே..?

உன் காதுக்கு
விருந்தான
பூங்காற்றின்
நேரலைகள்
அப்படி
என்னதான்
சொன்னதோ..?

அருள் நிலா வாசன்
10.12.2015                                                           

Posted by அருள்நிலா வாசன் at 17:30 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: கவிதை

Wednesday, 2 December 2015

விடியாத தேசத்தின் முடியாத சோகம்......

நீண்ட அமைதிக்குப் பின்
அப்படி ஒரு அவலம்
நிமிர்ந்து பார்க்குமுன்
நிலத்தில் விழுந்தாள்
மூச்சு அடங்கி
மீண்டும் எழுந்தாள்

முகமெல்லாம் காயம்
இரத்தக் கசிவில்
ஆடை சிவந்தது
ஆவென்று திறந்திருந்த
கதவின் வழியாக
அவளின் நிம்மதி
அவசரமாய்
வெளியேறியது

போன உயிரைத்
துரத்திப் பிடித்தவள்
தூக்கில் தொங்கவும்
துணிந்தாள்

ஆனாலும்
முடியவில்லை

குறுக்கே தடுக்க
வந்த
குற்ற உணர்வை
இழுத்து வைத்து
குலுங்கிக் குலுங்கி
அழுதாள்

கூடவே இருந்த
விடுதலையுணர்வை
குறி வைத்துச்
சுட்டாள்
குலைத்துக் கொண்டிருந்த
நாய்

முட்டாள்
ஆனதுபோல்
கிட்ட வந்து நின்று
அமைதி காத்தது

விடியாத தேசத்தை
விடுவிக்கப்
போனவள்
விதையொன்றைச்
சுமக்கின்றாள்

அழித்து எழுத
முடியாமல்
அழுத்தி எழுதிய
தாய்மொழி
தெரியாத
அந்தச் சின்னக்
கவிதை
சொல்லப் போகும்
அவளின்
சோக வரலாறு..
.

.
அருள் நிலா வாசன்
2.12.2015                                .


Posted by அருள்நிலா வாசன் at 06:03 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: கவிதை
Newer Posts Older Posts Home
Subscribe to: Comments (Atom)

About Me

அருள்நிலா வாசன்
View my complete profile

Blog Archive

  • ►  2020 (1)
    • ►  September (1)
  • ►  2017 (7)
    • ►  December (2)
    • ►  October (1)
    • ►  September (1)
    • ►  August (1)
    • ►  February (2)
  • ►  2016 (62)
    • ►  October (15)
    • ►  September (3)
    • ►  August (2)
    • ►  July (5)
    • ►  March (16)
    • ►  February (14)
    • ►  January (7)
  • ▼  2015 (70)
    • ▼  December (6)
      • போகட்டும் விட்டுவிடு...
      • கூடு திரும்ப.....
      • காத்திருந்து கடைசியில்
      • போதை தெளிந்த பின்...
      • காற்றுக்குத் தூதுவிட்டேன்
      • விடியாத தேசத்தின் முடியாத சோகம்......
    • ►  October (7)
    • ►  September (3)
    • ►  August (6)
    • ►  July (7)
    • ►  June (7)
    • ►  May (19)
    • ►  April (6)
    • ►  March (9)
Simple theme. Powered by Blogger.