Thursday, 10 December 2015

காற்றுக்குத் தூதுவிட்டேன்

வாச மல்லிகையை
வளவெங்கும்
நட்டு வைத்து
அது நித்தியமாய்
என் தலையில்
மொட்டோடு
பூத்திருக்க.....


நித்தமும் உன்
பாட்டாகி
உன்பாச வலையில்
விழுந்திருக்க
வயல்
வரம்பெல்லாம்
வளர்ந்திருந்த
புல் நுனியில்
உரம் போட்ட
கையாலே
நீ தொட்டு
உரசியதால்
வழிந்தோடிய
ஸ்வரங்களுக்கு
வரிசையாய் நின்று
நடனமாடிய
நெல்லும் மணியும்...


மஞ்சலிட்ட பத்திரிகையில்
உன் பெயருக்குப்
பின்னாலே
என் பெயரும்
பதிந்ததென்று
ஊரெல்லாம்
பாடத்தான்
காற்றுக்குத்
தூதுவிட்டேன்
நீ வந்து
நிக்கிறியே..?

உன் காதுக்கு
விருந்தான
பூங்காற்றின்
நேரலைகள்
அப்படி
என்னதான்
சொன்னதோ..?

அருள் நிலா வாசன்
10.12.2015                                                           

No comments:

Post a Comment