Tuesday, 29 March 2016

கடைசிவரை அதே குழப்பம்....


குழப்பத்தில
இருந்தாலும்
நான்
குறுக்கு வழிதேடி
கூசிக் கூசி போகயில

கட்டுமரம் பறக்குதென்று
கருங்குருவி
சொன்னதென்று
கடைசி வரை
நம்ப வைத்து
கண்ணைக் கட்டி
என்னை
காட்டில அலைய விட்டு

கண்ணதாசன் வரிகளை
கடைசிவரை
சொல்ல வைத்து
கண்ணே உன்னை
நான்
காந்தம் போல
இழுத்து வைத்து

கையுக்குள்ள
காப்பேனென்று
கதை கதையாய்
வசனம் பேசி
காணாமல் போயிட்டியே
கண்ணீரும்
கம்பலையுமாய்
காதல் வைரசுடன்
எனக்கு
கடைசிவரை அதே
குழப்பம்...............

அருள் நிலா வாசன்
29.03.2016                                     .

Sunday, 6 March 2016

நித்தமுந்தன் நினைவாலே.......

நித்தம் உந்தன் நினைவாலே
நித்திரையில்
புலம்புகின்றேன்
மொத்தமாய் நீதந்த
முத்தத்திலே
மூழ்கிவிட்டேன்


நீமட்டும்
கிடைத்துவிட்டால்
கொடிமலராய் நான்
படர்ந்திருப்பேன்


பூவிரியும் மாலையில்
உனக்காகக் காத்திருப்பேன்
மல்லிகை வாசத்திலே நான்
மடிசாய்ந்து தூங்கிடுவேன்


நானாக நானில்லை
உன்னை நம்பியே
வாழுமிந்த நாளெல்லாம்
நட்ட நடுநிசியில்
நனைகின்றேன்
பெருமழையில்
நித்தமுந்தன் நினைவாலே.......

.

அருள் நிலா வாசன்
06.03.2016                                                      


நிஜமாக நாம் வாழ

எத்தனை நாள்
இந்த
இயற்கையும்
அழகும்
இப்படியே இருக்கிறது

அத்தனையும்
அனுபவிக்க
ஒப்பனைகள்
தேவை இல்லை

இப்பனைகள்
இதுவரைக்கும்
சொல்லித்
தந்த
கதைகள்
எல்லாம்

கற்பனையை
கலைத்துவிட்டு
நிஜமாக
நாம் வாழ
இன்னும்
எத்தனை நாள் இருக்கிறது...?

அருள் நிலா வாசன்

06.03.2016                                                

காதல் ஜுரம் வந்திரிச்சு



சொல்லிப் பார்த்தேன்
உனக்கு
சொன்னதொன்றும்
புரியலயே

சொல்லாமல்
நான் விட்டும்
பார்த்தேன்
உன் சோலி
எனக்கு
தெரியலயே

சொட்டு சொட்டாய்
உதிர்ந்த மழையில்
சொந்தமாய்
வந்திடென்று
சொல்லச் சொல்லி
அனுப்பி
வைத்தேன்

நனைந்தாயா
தெரியலயே....???

நித்தம் நித்தம்
காதல் மழையில்
நனைந்ததனால்
எனக்கு

காதல் ஜுரம்
வந்திரிச்சு
கைவசம்
மருந்தும் இல்லை
கையோட கொண்டு வர......

அருள் நிலா வாசன்
06.03.2016                                                       

உண்மைகள் தொலைந்தால்...

நடிக்கத் தெரிந்தவன் விருது பெறுகின்றான்
நடிக்க மறந்தவன் எருது போலாகின்றான்
உலகமே ஒரு நாடக மேடை - அதில்
உண்மைகள் தொலைந்தால் அது வெறும் சாக்கடை.

.
.
அருள் நிலா வாசன்
06.3.2016
                                                                  

காணத் துடித்த என் கண்களுக்கு.......

உன்னைக்
காணத் துடித்த
என்
கண்களுக்குள்

நம்பிக்கை வைத்தாய்

கண்ட பின்னர்
வாழ்வதற்காய்
கனவுகளைக்
கணக்கில் வைத்தாய்

காண வந்த காட்சி
எல்லாம்
என்
கனவாகிப்
போகுமென்று
கருக் கொண்ட
மேகங்கள்
கதை சொன்னபோது

கட்டி வைத்த
ஆசைகளை
அவிட்டு
கொட்டி விட்டேன்
கரைந்தே போகட்டும்
இனித் தேவை
இல்லையென்று........

அருள் நிலா வாசன்

06.03.2016                                                       

உன் பெயரை உச்சரித்தால்.....

உன் பெயரை
உச்சரித்தால்

உதடுகள்
உதறுது

உன் மூச்சை
உணர்ந்து கொண்டால்
உள்ளமே
உருகுது

உன் காலடி
ஓசை மட்டும்
எனக்குள்ளே
கேட்குது

ஓடி வந்து
பார்த்தாலே
உன்
உருவம் தான்
தெரியுது

என் பெயருரோடு
இணைத்து
அழகு பார்த்தேன்
அது
ஒட்டிக் கொண்டது
என்னோடு

உன்
உத்தரவின்றி
என்னுள்ளே வந்த
உன் பெயர்தான்...........

அருள் நிலா வாசன்

06.03.2016                                                    



என் கனவே நீ கலையாதே..





உள்ளம் எல்லாம்
உனதாய் நினைத்து
ஊருக்குள்ளே
உன்னை அழைத்து

உள்ளதை எல்லாம்
சொல்ல நினைத்து
உசாரை கொஞ்சம்
வரச் சொல்லி அழைத்து

தாங்கிப் பிடிக்க
தைரியமின்றி
ஊண்டிக் கொள்ள
உன் உள்ளத்தை வைத்து
உரக்கச் சொன்னேன்
உன் காதில் கேட்க

விழுந்த அடியில்
விழித்து பார்த்தேன்
வீட்டில் நானும்
மாட்டிக் கொண்டேன்...

என் கனவே நீ கலையாதே......
.

அருள் நிலா வாசன்
06.03.2016                                                   
                                                                     

Friday, 4 March 2016

நானே தான்

உதட்டிலிருந்து
உள்ளம்வரை
நல்ல சுகம் தந்துனக்கு
நாள் குறிப்பது
நான் தான்....
.
.

அருள்  நிலா வாசன்
04.03.2016                           

அன்பு

கூன் விழுந்த பின்பும்
கூட வரும்
அன்பு

.
.
அருள் நிலா வாசன்    

வாடிக்கைதானோ என்று.



பாதை மாறிவந்த
பதட்டத்தில்
படலையைத் தள்ளிவிழுத்தி
உள்ளே நுழைந்தது
சுழன்று வந்த
ஊதக் காற்று...

இதுதான்
சாட்டென்று
சத்தமேயில்லாமல்
சரிந்து படுத்தது
பார்த்துகொண்டிருந்த
பட்டமரம்..

பக்கத்தில் நின்ற
பனைமரமும்
தன் பங்கிற்கு
பாழையைக் களட்டிக்
கீழே போட்டது..

பாழை விழுந்த சத்தத்தில்
திடுக்கிட்ட
தரையில் நின்ற அணில்
தாவிப் பாய்ந்த
மாமரத்தில்
பழுத்திருந்த மாம்பழம்
பக்கத்தில் சொல்லாமல்
தொப்பென்று
விழுந்தது....

மாம்பழத்தை எடுக்க
வந்தவளின்
அவசரத்தில்
படிக் கல்லுக்கும்
பங்கிருந்து
தடக்கியவள்
சாரீரம்
சறுக்கி விழுந்தது..

விழுந்தவளைத் தூக்கிவிட
வீட்டுக்குளிருந்து
ஓடி வந்தவனைப்
பார்த்து
வாடிக்கைதானோவென்று
படலைக்குள்
வந்த கிழவி
பட்டென்றுகேட்ட
கேள்விக்கு

வெட்டி வேரு வாசம்
விடலைப் பிள்ளை நேசம்
வானலையில்
பாட்டு
மறுபடியும்
காற்றோடு
வீம்பாய் கலந்தது
.
.
அருள் நிலா வாசன்

04.03.2016                                              

மலர்களைப் போல

மனங்களில் பூத்திருக்கும்
பொறாமையைப்
பிடுங்கி எறியுங்கள்
மலர்களைப் போல
மகிழ்வாயிருக்கும்
உங்கள்
அகமும் முகமும்.
.
.
அருள் நிலா வாசன்

04.03.2016                                  

தானம்

உயிர் பிரிந்த பின்னும்
உலகத்தைக் காண
உனக்கான வரம்
உயரிய கண்
தானம்.
.
.

அருள் நிலா வாசன்
04.03.2016                              


ஒளியான எதிர்காலம்

விளையாட்டாய்
விரிந்திருக்கும்
எளிதான எண்ணத்தில்
ஒளியான எதிர்காலம்
அமைதிக்குள்
ஓளிந்தே
அழகாய் விரிகிறது..
.
.

04.03.2016
அருள் நிலா வாசன்.   


உன் கேள்விக்கு பதில் ~


ஓடித் திரிந்த
என் நாடித்துடிப்பு
ஒரு கணம்
அப்படியே நின்றது
வேடிக்கை பார்த்த
அத்தனை பேரும்
உன்னை
அடித்திருந்தால்
அதிசயமில்லை
பதிலாக
என்னைப் பார்வையால்
தள்ளி விழுத்தினர்

ஓடிப் போகலாமா
என்று நீ
கேட்டதுதான்
எனக்குக் கூட
வேடிக்கையாய்
இருந்தது..
பார்த்தவர் கண்களுக்கு
பதிவிரதை
நானென்று
எப்படித்தான்
நான் நின்ற இடத்தில்
நிரூபிப்பது..?
முதல் முதலாய்
உன் முகம்
இன்று தானே
எனக்கு
அறிமுகம்.....
உன் கேள்விக்கு
பதில்
உன்னிடம்தான்
இருக்கிறது
என் சுவாசக்
காற்றோடு
கலந்திருக்கும்
என்னுயிரில்
உயிர் நிலையாகக்
கலந்துவிடு
அதை நான்
உணர்ந்தால்
அப்போது
தெரிந்துவிடும்
.
.
04.02.2016
அருள் நிலா வாசன்        .

முகம் பார்த்து ஜோசிகம்.



ஜாதகத்தைப் பிரித்து வைத்து ஜனனத்திலிருந்து மரணம்வரை அது என்ன சொல்லுது எண்டு இடையிடையே கிளி ஜோசியம் கேட்டு அதுக்கும் மேல கைவிரலைத் தொட்டு தொட்டு இழுத்துப் பார்த்து அவர்கள் சொன்னதை அப்படியே நம்பிக்கொண்டு எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் அவதானமாக எடுத்து வைத்து., கரடு முரடான மேடும் பள்ளமும் வருவதே தெரியாமல் வருகின்ற வாழ்க்கையில்

          
                  ஏற்றத்தை எதிர் பார்த்துப் படிக்கட்டுகளில் கால் வைக்கும் ஆட்களை விட நான் கொஞ்சம் வித்தியாசமானவர் எண்டுதான் சொல்ல வேண்டும்.
காலம் கொண்டு சென்ற பாதைகளில் அனுபவங்களை பாடமாகக் கற்றுத் தெளிந்து பயணித்துக் கொண்டிருந்த என் வாழ்க்கையில்., ஒரு திடீர் திருப்பம் வரப்போவதை எனக்கு முன் கூட்டியே சொல்ல வந்த., என்னை எதிர்பாராத விதமாய் சந்தித்த முன் பின் அறிமுகமாகாத ஓருவர் என்னைக் கண்ட உடனேயே முகம் பார்த்துக் குறி சொல்லி என்னை ஆச்சரியப்பட வைத்த விடயம் என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு சம்பவம்.

அந்த ஒரு நாள் மாலை என்னை வாவென்று வருந்தியழைத்தது போன்ற அந்த சம்பவம்.

                  மதியம் சமைத்துக் கொண்டிருந்த பொழுதே இன்று எப்படியும் இவர்களைப் போய் நான் பார்த்தேயாக வேண்டுமென்று ஏனோ என் மனம் அப்படித் துடித்தது. சரி போவோமேயென்று எனது சின்னப் பர்ஸைத் துணையாகக் கூட்டிக் கொண்டு பல நாள் பழகிய ஒரு வறிய குடும்பத்தைப் பார்க்கவென்று பழகிய பாசம் என்னில் பொங்கி வழிய நான் இருக்கும் ஊரை விட்டு ஒன்ரரை மணி நேரம் பஸ்ஸில் பிரயாணம் செய்து போயிருந்தேன்.


என்னைப் போலவே கண்டதும் சந்தோசக் களிப்பால் குடும்பமே கட்டி அணைத்து வரவேற்று அன்பை என் மீது மாலை முழுவதுமாக பொழிந்தார்கள். பெண்ணாகப் பிறந்துவிட்டால் பொழுது சாயுமுன்னர் வீட்டிற்குள் ஒரு பொம்மையாய் இருந்திட வேண்டுமென்ற எண்ணம் என் அடிமனதில் உறுதியாய் ஊறியிருக்க., இன்னொரு நாள் இதுபோல சந்திக்கலாமென்று அவர்களிடம் சொன்னாலும் பிரிய மனசின்றி அவர்கள் இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால் தான் என்ன.? என்ன அவரசம்.... என்ன அவசரம் என்ற பாடல் வர பல வருடங்களூக்கு முன்னரே அப்படி சொல்லிச் சொல்லி என் கையை பிடித்துக் கொண்டே பேசிப் பேசி வாசல் கதவுவரை என்னோடு குடும்பமே வந்தார்கள்.


                 நானும் வாசலுக்கு வரவும் அவர்களின் முன் வீட்டுக்காரரும் என்னைக் கண்டவுடன் ஆஹா...அக்கா எப்பிடி இருக்கிறீங்க என்று என் கையைப் பிடிக்கவும்., என் பயணம் சற்றுத் தடங்கலாகியது. அதே தெருவில் குடியிருக்கும் நகைக் கடைக்கார அண்ணனின் மனைவி அந்த வழியாக வந்து ஆஹா எப்ப வந்தீங்க என்று சொல்லிக்கொண்டு அவ வாங்கி வந்த மரக்கறிக்கூடையை கீழே வைத்துவிட்டு என் கதை கேட்கும் நேரமிது என்று என் மீது கைப் போட்டு சாய்ந்துகொண்டே கதைத்தார்.


இந்த நொடி., இந்த இதே நொடிதான் என்னை வியப்பில் ஆழ்த்தியது.


எனது நண்பர்களின் வீடு ஒரு தெருவின் கடைசி வீடாக இருந்தது. அடுத்த தெருவிலிருந்து திடேரென்று இந்தத் தெருவுக்குள் நுழைந்த ஒரு வயதான வெள்ளைச் சேலை கட்டிய, கருத்த உருவமுள்ள வெளுத்த தலை வயதை வெறுமனே எடுத்துக்காட்ட ஒரு பொன் நிறமான வேலும் கையில் கொண்டு சாஸ்திரம்...ம்..ம்...ம்..ம்..ம்.,ம் என்ற குரலோடு அப்பெண்மணி எம்மருகே நெருங்க.,


                முன் வீட்டுத் தாயும் பிள்ளைகளும் திடீரென்று தமது கதவுக்குள் நுழைந்து கதவை தாழ்பாள் போட்டுக் கொண்டு மறைந்துவிட்டார்கள்.
வந்த கிழவி என்னைப் பார்த்த அந்தக் கணமே
வார்த்தைகளை வரிசையாகக் கொட்டிக் கொண்டு போனதில் என் இறந்த காலமும்., நிகழ்காலமும் வெள்ளைத் துணியில் பச்சைச் சாயத்தைக் கொட்டினால் அது எப்படி எடுத்துக் காட்டுமோ அப்படி உண்மையாகவே இருக்க


                 ஒவ்வொரு வரியாக அவர் வாய் மொழி வந்து காற்றுடன் கலந்து எனக்குள்ளே ஓரு அதிர்ச்சி உணர்வை ஏற்படுத்தவும் எனக்கு தலை முதல் கால் வரை வியர்க்கத் தொடங்கியது.
அவர் சொன்ன உண்மையான சம்பவங்கள் எனக்கு மட்டுமல்ல நான் பாசமாக பார்க்கப் போயிருந்த அந்த ஏழைக் குடும்பத்தினருக்கும் எல்லாமே தெரிந்திருந்ததனால் அவர்களும் அதிசயப் பட்டார்கள்.
அந்தக் கிழவியோ இறந்த காலம், நிகழ்காலத்தோடு நிறுத்திவிடாமல் என் எதிர் காலம் எப்படி எப்போ என்ன நடக்கப் போகிறது என்பதை புட்டுப் புட்டு வைத்தார் என்பதை நான் உணர நீண்ட நாள் எடுக்காது என்பதை அந்தக் கணம் நான் உணரவேயில்லை.


                 என் முகத்தில் அப்படி என்னதான் எழுதி இருந்ததோ நான் அறியேன். முகத்தில் எழுதியிருந்ததைப் படிப்பது போன்று மூச்சே விடாமல் அத்தனையையும் படித்து முடிப்பது போல கடந்த காலம் நிகழ் காலம் எதிர் காலம் மூன்றையுமே சொல்லி முடித்த பின்னரே அந்தக் கிழவி மூச்சு விட்டார்.


நான் அந்த அதிர்ச்சியில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வந்து நீங்க எங்கிருந்து வருகிறீர்கள் என்று தழு தழுத்த குரலில் அவரிடம் கேட்டேன்.
நான் கதிர் காமம் போகும் வழியில் உன்னை நானிங்கு சந்திக்கிறேன். முனீஸ்வரத்திலிருந்து வருகிறேன். கதிர்காமத்தில் உன் பெயரில் நான் பூசை வைக்கிறேன். நான் சொன்னது நிஜமாயிருந்தால் நீ...... எனக்கு..... உடுபுடவை வாங்கித் தாவென்று சொல்லி ஒரு வெள்ளைத் துணிக்குள் சுற்றி வைத்திருந்த ஒரு கடவுள் சிலையை காட்டினார்.


                 அதைப் பார்த்த அந்த நொடி நான் எப்படி இருந்தேன் என்று என்னால் சொல்ல முடியவில்லை. ஒரு கணம் நான் அமைதியாகினேன்.
எனது சின்னப் பர்ஸை திறந்தேன். அதில் பஸ் காசைத் தவிர பெரிய ஒரு தொகை நோட்டாகத்தான் ஒரே ஒரு நோட்டு இருந்தது. அந்த வறிய குடும்பத்திடம் இதை மாற்றித் தர முடியுமா என்று கேட்க என் மனசு தப்பு என்று சொல்லி மனதை மாற்றிக்கொண்டே சிந்தித்தேன்..

      
                 இனி எங்கே நான் இந்த கிழவியை சந்திக்கப் போகிறேன். இதையே என் காணிக்கையாகக் கொடுத்திடுவோமென அப்போது எனக்கு அது பெரிய தொகையாக இருந்தாலும் நான் முழு மனதோடு அந்த கிழவியின் கையில் கொடுக்க எல்லோரும் அந்தக் காட்சியில் அதிசயம் ஆனால் உண்மை என்று வியந்து போய் நின்றார்கள்.


                 சில வேண்டுதல்களை யார் கண்ணிலும் படாமல் நீ செய்ய வேண்டுமென்று ஒரு குறிப்பிட்ட நாள் கணக்கும் அந்தக் கிழவி எனக்கு சொல்லித் தந்தார். அதன் வழியே நான் தொடர்ந்தேன். அவர் சொன்னபடியே அந்த நாள் கணக்கில் என் வாழ்க்கையில் அதிரடி மாற்றங்கள் நடந்து என் வாழ்க்கையை வேறு திசையில் திருப்பிப் போட்டது அவர் சொன்ன வார்த்தைகள் அப்படியே என் வாழ்க்கையோடு பயணித்தது.
சில வருடங்களில் பின்னர்........


                 நான் எதிர் பாராத விதமாக ஊருக்கு போயிருந்தேன். எனது பிரயாணத்தில் முக்கிய அம்சமாக முன்னேஸ்வரக் கோயில் விடயம் முக்கிய இடம் பிடித்தது. அவர் சொன்னது என் நினைவில் உறுத்திக் கொண்டே இருந்ததனால் நான் கோயிலில் குடியிருக்கும் இறைவனுக்கு உடுபுடவை பழங்கள் தட்டில் எடுத்துக் கொண்டு பூசைக்கு ஆவலோடு போய் அந்த கிழவியை தேடினேன்.


இறைவன் காட்சி தருவது எப்போது எங்கு எந்த வடிவத்தில் என்று எமக்குத் தெரிவதில்லை என்பதை அந்த நாள் அந்த நேரம் நான் உணர்ந்தேன்.
நான் தேடிய அந்தக் கறுத்தக் கிழவியை நான் பார்க்கவேயில்லை.....

அதிசயம் ஆனால்........உண்மை....    .
.
04.02.2016