Saturday, 27 August 2016

அன்னை தெரேசா

ஏழைகளின் குழந்தைகளை
உன் வாழ்வின்
கருவாக்கினாய்
எளியமுறை வாழ்க்கைதனை
உருவாக்கினாய்
என் எண்ணங்களில்
உன் சிந்தனையைப்
பொருளாக்கினாய்
அம்மா
நீ
என் பாதையினை
நல்வழியின்
தெருவாக்கினாய்
உன் நினைவுப் பூக்களின்
வாசனையில்
நான்
வழி நடந்து
அருளாகினேன்.
.
.
அருள்நிலா வாசன்
27.08.2016

Wednesday, 10 August 2016

என் இதயம் இப்போது.....

எதிர்பார்க்காத பொழுதொன்றில் 
எதிரில் வந்த 
பிரிவொன்றை 
இடிவிழுந்த மேகங்களின்
இரக்கத்தில் நனைந்தபடி 
சந்தித்த பொழுது 
உன் பரிவை
நான் எதிர் பார்க்கவில்லை ..

நீ வரம்பு கட்டி
வைத்திருந்தும்
வழி தவறி வந்து 
விழுந்த 
வலி சுமந்த 
வார்த்தைகளில்
அழிக்கமுடியாது 
ஊறிப்போயிருந்த 
உண்மைகள் 
என் உள்ளத்தில்
உளிகொண்டு தாக்கி 
என்னைப் 
பழிவாங்கிய கீறல்கள் .

இனியும் ஒரு சந்திப்பு 
அது என்னோடு இல்லை
ஏனென்றால் 
என் இதயம் இப்போது 
உயிரோடு இல்லை... . . 

.
அருள் நிலா வாசன் 
10.08.2016                            .