Thursday, 9 February 2017

உன்னுயிர் நான் தானே

பூவுக்குள் ஓழிந்திருக்கும்
வாசனையின் எல்லைக்கு
புதுப்புது அர்த்தங்கள்
வர்ணங்களாய் என் நெஞ்சில்
வரைந்திட்ட உன்னோடு
உன்னுயிருக்குள் நான்
கலந்து
உன் வழித்துணையாகவா
பூமிக்குள் சுழியோடி
புத்தம்புது வழிதேடி
வாழ்ந்திடத்தான்
இப்பூமகளின் நெஞ்சத்தில்
ஒழிந்திருக்கும்
எண்ணங்கள்
ஒவ்வொன்றாய்
பூமஞ்சத்தில் நிறைவேற
உன் வழித்தடங்கள்
எப்பொழுதும்
உன்னருகில் நான் தொடர
என் வழித்துணையாக வா
உன் அன்புக்காய் காத்திருக்கும்
உன்னுயிர் நான் தானே...!!!
.
அருள் நிலா வாசன்
9.02.2017

தாய் வீடு


மாடி வீடு மெத்தை வீடு
மறுபடியும் அத்தை வீடு
மணவாளன் சொத்து வீடு
மணமாகிப் புகுந்த வீடு
கோடி பணம் உழைத்தாலும்
கோபுரத்தில் இருந்தாலும்
கொஞ்ச நேரம் உட்கார்ந்து
ஊர்ப் பயணம் உருவெடுக்கும்

அனுப்பி வைத்த தாய் மனசை
அள்ளி அணைக்கத் தோன்றும்
நொடிப் பொழுது அன்னை மடியில்
நோகாமல் உரிமையுடன் தலைசாயும்
தாயின் முந்தானை வியர்வை வாசம்

தலையிடிக்கு மருந்தாகும்
நோய் கூடப் பறந்தே போகும்
தாய் வீடு மனசுக்கு விருந்தாகும்
வாகனங்கள் இல்லையென்றாலும்
வேகின்ற வெய்யிலிலும்
எட்டி நடை போட்டு வேகமாய்
வாவென்றழைக்கும் தாய் வீட்டு முற்றம்
.
.
அருள் நிலா வாசன்
9.02.2017