Wednesday, 2 August 2017

குறும் கவிதைகள்

1.விதவையென்று சொல்லி
அவளை
விலக்கி வைக்காதீர்கள்
விளக்கேற்ற விடுங்கள்
அவள் கண்ணிலும்
ஒளி தெரியட்டும்
.
அருள் நிலா வாசன்
02.08.2017



2. வீதியில் தனியாகப் போவதனால்
விளம்பரமென நினைக்காதீர்கள்
வீட்டிலுங்கள் தங்கையும்
தனியாகத்தான் இருக்கிறாள்...

.
3. கையிற்கெட்டிய தூரத்தில்
இருப்பதனால்
கசக்கி முகராதீர்கள்
பூக்களை
வாழ விடுங்கள்...

4. 





கட்டிய சேலை கசங்கி இருந்தால்
அவளை
களங்கப் படுத்தாதீர்
காலத்தின் பின் ஓடிக்
களைத்துப் போய் வந்திருப்பாள்
முடிந்தால் நல்ல கணவனாய்
கொஞ்சம் தேநீர்
ஊற்றிக் கொடுங்கள்


5..  .ஒற்றை வார்த்தையில்
அவளை
ஒதுக்கி வைக்காதீர்கள்
ஓரு வேளை
அவளின்னும்
பசியோடிருக்கலாம்
முடிந்தால் ஒரு குவளை
தண்ணீராவது கொடுங்கள்
அவள் தாகம் தீரட்டும்.


6.   பார்வையாலே அவளை
கொல்லாதீர்கள்
பழைய மரத்தடியில்
அவள் பட்டினியால்
செத்துக் கொண்டிருக்கிறாள்.