Monday, 19 September 2016

நிழலாய் என் பக்கத்தில்.....



மேகம் கறுத்து
இருட்டைஇழுத்துக்
கொண்டுவர
மாலையும் மயக்கமும்
ஒன்றுக்கொன்று
போட்டி போட்டது....

நான்
பிரட்டிப் பார்க்க
நினைத்த
என் டயரின்
கடைசிப் பக்கம்
தானாகவே
மூடிக் கொண்டது...

திரும்பிப் பார்த்தேன்
உன் முகத்தை
நீயோ
எட்ட முடியாத
தூரத்தில்
என் நினைவுகளைத்
துரத்திவிட்டு
சுவருக்குப் பாரமாய்
நிழலாய்
என் பக்கத்தில்
ஆணியில் தொங்கியபடி..

மேகம் விட்ட கண்ணீரும்
என்னை நனைக்காமல்
விரிந்த குடைக்குள்
நான் மட்டும்
தனியாக
உன் நினைவுகள்
எனக்கு துணையாக
நடக்க ஆரம்பிக்கின்றேன்

சொன்னதையே
விட்டு விட்டுச்
சொல்லிக்கொண்டிருக்கும்
மழையிடம்
ஒரேயொரு
கேள்வி கேட்டேன்...

இன்னும் என்ன
சொல்லப் போகிறாய்..?

அருள் நிலா வாசன்
19.9.2016                                 .

என் கரம் தொட்டு அப்போது ......



நான் மட்டும் இப்போது

நிலவோடு பேசுகிறேன்

என் கரம் தொட்டு அப்போது

நீ சொன்ன வார்த்தைகள்

ஒவ்வொன்றும்

தனித்தனியாய்

வரம் கேட்டு நிற்கிறது

நீ வருவாய் என.....


அருள் நிலா வாசன்  
19.09.2016

Thursday, 8 September 2016

நான் தோற்றுப் போகவில்லை

துயரங்கள் மட்டுமே தொடர்ச்சியாய் என்னைப் பின் தொடர்ந்து வந்தாலும் உன் துயரத்தைத் துடைக்கத்தான் துணையாகி நானிருந்தேன்.... திரை மறைவில் நடந்த உன் திருகு தாளங்களை என் காதுகளைத் திருகச் சொல்லி மெட்டுப் போட்டு மெருகேத்திச் சொன்னாலும் திட்டித் தீர்க்க மனசில்லை எனக்கு.... நீமட்டும் போதுமென்று நானிருந்தேன் பொறுமையிழந்தவன் நீ துடித்துப் போன என் உள்ளத்தை துடைப்பக் கட்டையால் அடித்தாலும் உன்னிடம் நான் இன்னும் தோற்றுப் போகவில்லை . . அருள் நிலா வாசன். 08.09.2016