Monday, 19 September 2016
நிழலாய் என் பக்கத்தில்.....
மேகம் கறுத்து
இருட்டைஇழுத்துக்
கொண்டுவர
மாலையும் மயக்கமும்
ஒன்றுக்கொன்று
போட்டி போட்டது....
நான்
பிரட்டிப் பார்க்க
நினைத்த
என் டயரின்
கடைசிப் பக்கம்
தானாகவே
மூடிக் கொண்டது...
திரும்பிப் பார்த்தேன்
உன் முகத்தை
நீயோ
எட்ட முடியாத
தூரத்தில்
என் நினைவுகளைத்
துரத்திவிட்டு
சுவருக்குப் பாரமாய்
நிழலாய்
என் பக்கத்தில்
ஆணியில் தொங்கியபடி..
மேகம் விட்ட கண்ணீரும்
என்னை நனைக்காமல்
விரிந்த குடைக்குள்
நான் மட்டும்
தனியாக
உன் நினைவுகள்
எனக்கு துணையாக
நடக்க ஆரம்பிக்கின்றேன்
சொன்னதையே
விட்டு விட்டுச்
சொல்லிக்கொண்டிருக்கும்
மழையிடம்
ஒரேயொரு
கேள்வி கேட்டேன்...
இன்னும் என்ன
சொல்லப் போகிறாய்..?
அருள் நிலா வாசன்
19.9.2016 .
Labels:
கவிதை
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment