Thursday, 8 September 2016

நான் தோற்றுப் போகவில்லை

துயரங்கள் மட்டுமே தொடர்ச்சியாய் என்னைப் பின் தொடர்ந்து வந்தாலும் உன் துயரத்தைத் துடைக்கத்தான் துணையாகி நானிருந்தேன்.... திரை மறைவில் நடந்த உன் திருகு தாளங்களை என் காதுகளைத் திருகச் சொல்லி மெட்டுப் போட்டு மெருகேத்திச் சொன்னாலும் திட்டித் தீர்க்க மனசில்லை எனக்கு.... நீமட்டும் போதுமென்று நானிருந்தேன் பொறுமையிழந்தவன் நீ துடித்துப் போன என் உள்ளத்தை துடைப்பக் கட்டையால் அடித்தாலும் உன்னிடம் நான் இன்னும் தோற்றுப் போகவில்லை . . அருள் நிலா வாசன். 08.09.2016

No comments:

Post a Comment