Sunday, 31 December 2017

அம்மா

கூடுமட்டும் தனியாய் ஊர்வலம்
கும்பிடு போடுவார் ஓரமாய் நின்று
காடுவரையும் கண்ணீரில் மிதந்து
சூடமேற்றி தீயை வைத்துத்
தேம்பி அழுவார் அம்மா என்று ....

பொறுமையின் சிகரமாய் இருந்த தெய்வம்
போனபின் புலம்பியென்ன பயன்
முதுமையில் தாங்கிப் பிடிக்க இரு கரங்கள்
எமக்கென்று இருக்கும்வரையில்
பாரமில்லை அது வரம்
.
அருள்நிலா வாசன்
31.12.2017

Friday, 29 December 2017

கடந்து வந்த பாதையிலே

உழைக்காமல்
உருக்கமாய்
வாங்கிப் பழகியவன்
வாழ்க்கை
எப்பொழுதும்
தூக்க நிலையில்தான்
இருக்கும்
................................................................

தொடராய்
திருட நினைப்பவன்
திருந்தி வாழ
நினைக்கும்போது
அவனிடன் இருந்ததெல்லாம்
திருடப்பட்டிருக்கும்

..................................................

தூய்மையாய்
உள்ளத்தை அள்ளிக்கொடு
மெல்லத் திருக்கும்
உனக்கான கதவுகள்

......................................................

ஆணவத்தை
வெளியேற்றுங்கள்
அன்பு தானாய்
உள்ளே வரும்

.................................................................

சுய நலம் காப்பவன்
சுற்றத்தைவிட்டு
சூனிய உலகிற்கு
தள்ளப்படுவான்

..............................................................

தவறை ஒத்துக்கொள்பவன்
மீண்டும் தப்பு
செய்ய மாட்டான்

...........................................................

மன்னிக்கத் தெரிந்தவன்
மனசெல்லாம் எப்பொழுதும்
அளவில்லா
ஆனந்தம்

.........................................................

இருப்பதை
பங்கிட விரும்பாத
இருவருக்குள்
அன்பு இருக்க
வாய்ப்புகள் இல்லை
.............................................................

கொடுப்பதும்
விட்டுக் கொடுப்பதும்தான்
வாழ்க்கையின்
மிகப்பெரிய பலம்

..........................................................

பூக்களை பாருங்கள்
புன்னகை தானாய்
மலரும்

......................................................