கூடுமட்டும் தனியாய் ஊர்வலம்
கும்பிடு போடுவார் ஓரமாய் நின்று
காடுவரையும் கண்ணீரில் மிதந்து
சூடமேற்றி தீயை வைத்துத்
தேம்பி அழுவார் அம்மா என்று ....
பொறுமையின் சிகரமாய் இருந்த தெய்வம்
போனபின் புலம்பியென்ன பயன்
முதுமையில் தாங்கிப் பிடிக்க இரு கரங்கள்
எமக்கென்று இருக்கும்வரையில்
பாரமில்லை அது வரம்
.
அருள்நிலா வாசன்
31.12.2017
No comments:
Post a Comment