Sunday, 31 December 2017

அம்மா

கூடுமட்டும் தனியாய் ஊர்வலம்
கும்பிடு போடுவார் ஓரமாய் நின்று
காடுவரையும் கண்ணீரில் மிதந்து
சூடமேற்றி தீயை வைத்துத்
தேம்பி அழுவார் அம்மா என்று ....

பொறுமையின் சிகரமாய் இருந்த தெய்வம்
போனபின் புலம்பியென்ன பயன்
முதுமையில் தாங்கிப் பிடிக்க இரு கரங்கள்
எமக்கென்று இருக்கும்வரையில்
பாரமில்லை அது வரம்
.
அருள்நிலா வாசன்
31.12.2017

No comments:

Post a Comment