Friday, 8 January 2016

புலம் பெயர்வை உறுதிப்படுத்தி........

குறுகிய காலத்தைக்
குத்தகைக்கு எடுத்த
குளிர் காற்றுக்கும்
மழைக்கும்
இடையில்
குற்ற உணர்வில்லாத
சின்னச் சின்ன
ஒப்பந்தம்..


காப்புறுதி இல்லாத
வீடுகளைக்
கண்டபடி
காலி பண்ண
வாய்க்கு
வந்தபடி
திட்டி
வழி மண்டலத்தில்
தன்
கையெழுத்தை
வெள்ளைப்
பத்திரத்தில்
போலிகளாய்
போட்டு வைக்க...


மேலிடத்து
மோகங்களின்
அதிகாரம்
மொத்தாமாய்
இறங்கி வந்து
இருப்பிடத்தை
இழுத்து மூட..


வேற்று மொழி
விழங்காது
வெட்கித்த
பறவைகள்
வீடிழந்த சோகத்தை
வாய் நிறையக்
கவ்விக் கொண்டு
தன்
தாய் மொழியில்
பாட்டெழுதி
மனப் பாரத்தை
அழுத்தி
பாடிக்கொண்டே
தொடர்கிறது
புலம் பெயர்வை
உறுதிப்படுத்தி........


அருள் நிலா வாசன்
08.01.2016                                       

                 

Thursday, 7 January 2016

இன்பமாய் பயணிக்க.....

இத்தனை நாள்
காத்திருந்தேன்
நீ
எங்கு போயிருந்தாய்...


இரவுக்குள் பகலும்
பகலுக்குள்
இரவும்
மாறி மாறிப்
பயணிக்க
என்னை
இழுத்துக் கொண்டு
போகிறது
இருட்டுக்குள்
வெகு நேரம்..


யாரோ சொன்னார்கள்
கொஞ்சு மொழியில்
உன் பஞ்சு
வர்ணங்களை
என் மேல்
அள்ளிச்சொரிய
நீ
அடுத்த வாரம்
வருவதாக
நான் ஆடை
அணிகலன்களெல்லாம்
எடுத்து வைத்துக்
காத்திருக்கின்றேன்
உன்னோடு
இன்பமாய்
பயணிக்க.....


அருள் நிலா வாசன்
JANUARY 2016                                       .

Monday, 4 January 2016

இன்னும் வீடு திரும்பவில்லை

ஊரறியத் தாலிகட்டி
உருட்டி விட்ட
நாணயமாய்
தன்னருகில்
தலை குனிந்து
தனக்காக
வந்தவளை
ஊரே பார்க்கத்
தலை குனிய
வைத்தவனாய்..


அவள் நித்திரையை
அடகு வைத்து
நித்தமொரு கூலிக்கு
நாள் முழுதும்
அரிசி புடைத்து
பொறுக்கியெடுத்த
சில்லறைக்கு


உச்சி வெய்யில்
மண்டையில
இறங்கி நின்று
சூடடிக்க
கூட வந்த
பசியும் அவள்
வயிற்றைத் தின்று
ஏப்பம் விட


இழுத்து இழுத்து
அரைச்சு வைச்ச
மீன் குழம்பும்
இரால் பொரியும்
ஊரெல்லாம்
மணத்தது...


அவனையே நினைத்து
அவள்
கூட்டி வைத்த
கறியின் ருசி
நேற்றுவரை
காத்திருந்த
அவள்
நீங்காத பசி
நாக்கைச்
சுண்டிச் சுண்டி இழுத்தது....


ஊருக்கு பேரழகன்
ஊரளந்த கால்
வலிக்கு
உருவிவிட
ஒருத்தியென்று
பொருத்தம் பார்த்து
கட்டி வைச்ச
உத்தமியின்
பெற்றோரைக்
குற்றம் சொல்லி
என்ன பலன்....


மன்மத ராசனென்று
ஊரெல்லாம் சிரிக்குதென்று
மனசெல்லாம் அரித்துப்
புண்ணாகி
உள்ளிருந்து அழுபவளின்
உணர்ச்சிகளைக்
கொன்றுவிட்டு....


ராசிபலன் கேட்கவென்று
மறுபடியும்
மந்திரத்தில்
சாத்திரியின் வீடுதேடி
பரிகாரம் பண்ணிவிட்டால்
சந்ததிக்கு விடியுமென்று
சாதகத்தைச் சுருட்டியபடி
சத்தமின்றிப்
போன அம்மா
இன்னும்
வீடு திரும்பவில்லை

அருள் நிலா வாசன்....
04.01.2016                                                       .


Saturday, 2 January 2016

நிறம் மாறாத பூவாக...

உரு மாறிப்போன
உன் கட்டான
முக அழகின்
ஒட்டாத புருவத்தில்
முன் வழிதவறிய
பயணத்தின்
ஒற்றை முகவரி
ஒட்டிக் கொண்டிருந்தது


காத்திரமான திருப்பத்தில்
காத்திருந்த
என் விருப்பத்தை
விளக்கிச் சொல்ல
எதுவும்
விளங்காதது போன்ற
உன் நடிப்பில்
என் இதயச்சுவரில்
எத்தனை வெடிப்புக்கள்..


காலத்தை இடம் மாற்றிக்
கடனெடுத்து தடம் பதித்த
கால் தடங்கள்
கானலாய் உருவெடுத்த
உன் உள்ளத்து
எண்ணங்கள்
கருவறுத்துக்
கோணலாய்
கீறியே முடித்தது....


அதையறியாத
உன் சிரிப்பிற்குள்
ஓழிந்திருந்த
என் அத்தனை
தோல்விகளும்
வேதனை தாங்காமல்
வெளி நடப்பு
செய்தாலும்
ஒலியின்றி
என் மனம்
இன்னும்
அங்குதான்
ஒட்டிக்கொண்டிருக்கிறது.


வாடிப் போனாலும்
இன்னும்
நிறம் மாறாத பூவாக...

அருள் நிலா வாசன்.
03.01.2016                                         .

Friday, 1 January 2016

இன்னொரு தடவை வழியனுப்பி வைக்காதே...

தேர் முட்டியில்
தெய்வங்கள்
திசைபார்த்து ஏறும் போதே
உன் கண்களில்
முட்டிய கண்ணீரில்
கவலை
ஒட்டிக் கொண்டிருந்தது


வட்டிக்கெடுத்து
வளையல்
சங்கிலியென்று
வாய் கூசாமல் கேட்ட
அவன்
சீதணப் பட்டியலுக்கு
வஞ்சகமில்லாமல்
நீ போட்ட
அத்தனை பவுணும்
வளைகாப்பு முடிய
அடகு கடை
அலுமாரியில்
அலங்காரப் பொருளாம்...

கேள்விக் குறியாகி
வேள்விக்குக்
கொண்டுபோன
வெள்ளாட்டின்
நிலைபோல
வெறுங்களுத்தோட
அல்லாடும்
அவளுக்கு
விலையென்ன பேசி
விற்றானோ
படு பாவி....

கோட்டுக்குப் போனாலும்
செல்லாது
உன் வழக்கு
கொந்தளிக்கும்
உன் மனசு
கோடி பெறும்
கலங்காதே....
கொட்டிக் கொடுத்து
கட்டி வைச்ச
தாய் மனசை
நோகடிச்சு
பட்டி வளர்க்கத்தான்
போனானோ
வெளி நாடு...?

கொம்பனி சொந்தமென்று
கோடையில
சொன்னவன்
மாரிமழை
பெய்யமுன்
கந்தறுந்து போனானோ..?

கிளிபோல வளர்ந்த பிள்ளை
கண் கலங்காமல்
இருக்குமென்று
நீ கண்ட கனவெல்லாம்
தெளிவின்றிக் கலைந்தாலும்
வாயும் வயிறுமாய்
வீடு தேடி வந்தவளை
இன்னொரு தடவை
வழியனுப்பி வைக்காதே
அவனை நம்பி.....

அருள் நிலா வாசன்.                .

இந்த நொடியில்

திகிலூட்டும் சம்பவமாய்
திசை திரும்பிய
உன் மறுவடித்தில்
எதேர்ச்சையாய்
உன்னை
நான்
சந்திக்க நேர்ந்த போது
உன் கண்ணில்
தெறித்த
கேள்விக் குறிகள்
என்னைத்
திடுக்கிட வைத்தது...


உணவு மேசையில்
உன்னோடு
ஒட்டிக் கொண்டிருந்த
அவளின்
அவசர கவனத்தில்
நீ மட்டுமல்ல
நானும் இருப்பதனால்
எனக்குள்
நானே ஒளிந்து
என் உணர்வுகளைக்
கொன்றேன்.....

நீ என்னோடு
பயணித்த
அந்தக் குறுகிய
பயணத்தில்
தொலைந்தது
எல்லாமே திரும்பக்
கிடைத்திருக்கிறது
என் வாழ்க்கையைத்
தவிர....

அதை நான்
இந்த நொடியில்
உணர்ந்தேன்
இன்று
நீ பார்த்த பார்வைக்குள்
ஓழிந்திருந்த
உன் கேள்விக்கு
என்னிடத்தில்
இனிமேல்
பதில் இல்லையென்று....

அருள் நிலா வாசன்                         .

எப்போது தெரியவரும்..?

பொறுப்புகளை
பொறுக்கி எறிந்துவிட்டு
போகுமிடமெல்லாம்
சோம்பலை
இழுத்துவந்து
சொப்பனத்தில்
மிதக்கும் நீ
எப்போது திருந்துவது..?


கூலிக்கு மாரடிக்கும்
குப்பைக்காரன்
கூட்டி அள்ளும்
கூடியிருந்து
போதையேத்திய
போத்தல்களின்
சத்தத்தில்
பொழுது விடிகிறது
உனக்கு...

மயக்கத்தில் இருக்கும்
என் உயிருக்குள்
நீயிருந்து
ஏக்கத்தைத்
கலந்துவிட்டு
தூக்கத்தில் புரையேறிய
தாக்கத்தின்
காத்திருப்பில்
காலம் கரைவது
உனக்கு
எப்போது
தெரியவரும்..?
நீதானே என்
பொன் வசந்தமென்று....

 அருள் நிலா வாசன்.                                .