Thursday, 7 January 2016

இன்பமாய் பயணிக்க.....

இத்தனை நாள்
காத்திருந்தேன்
நீ
எங்கு போயிருந்தாய்...


இரவுக்குள் பகலும்
பகலுக்குள்
இரவும்
மாறி மாறிப்
பயணிக்க
என்னை
இழுத்துக் கொண்டு
போகிறது
இருட்டுக்குள்
வெகு நேரம்..


யாரோ சொன்னார்கள்
கொஞ்சு மொழியில்
உன் பஞ்சு
வர்ணங்களை
என் மேல்
அள்ளிச்சொரிய
நீ
அடுத்த வாரம்
வருவதாக
நான் ஆடை
அணிகலன்களெல்லாம்
எடுத்து வைத்துக்
காத்திருக்கின்றேன்
உன்னோடு
இன்பமாய்
பயணிக்க.....


அருள் நிலா வாசன்
JANUARY 2016                                       .

No comments:

Post a Comment