Friday, 1 January 2016

எப்போது தெரியவரும்..?

பொறுப்புகளை
பொறுக்கி எறிந்துவிட்டு
போகுமிடமெல்லாம்
சோம்பலை
இழுத்துவந்து
சொப்பனத்தில்
மிதக்கும் நீ
எப்போது திருந்துவது..?


கூலிக்கு மாரடிக்கும்
குப்பைக்காரன்
கூட்டி அள்ளும்
கூடியிருந்து
போதையேத்திய
போத்தல்களின்
சத்தத்தில்
பொழுது விடிகிறது
உனக்கு...

மயக்கத்தில் இருக்கும்
என் உயிருக்குள்
நீயிருந்து
ஏக்கத்தைத்
கலந்துவிட்டு
தூக்கத்தில் புரையேறிய
தாக்கத்தின்
காத்திருப்பில்
காலம் கரைவது
உனக்கு
எப்போது
தெரியவரும்..?
நீதானே என்
பொன் வசந்தமென்று....

 அருள் நிலா வாசன்.                                .

No comments:

Post a Comment