திகிலூட்டும் சம்பவமாய்
திசை திரும்பிய
உன் மறுவடித்தில்
எதேர்ச்சையாய்
உன்னை
நான்
சந்திக்க நேர்ந்த போது
உன் கண்ணில்
தெறித்த
கேள்விக் குறிகள்
என்னைத்
திடுக்கிட வைத்தது...
உணவு மேசையில்
உன்னோடு
ஒட்டிக் கொண்டிருந்த
அவளின்
அவசர கவனத்தில்
நீ மட்டுமல்ல
நானும் இருப்பதனால்
எனக்குள்
நானே ஒளிந்து
என் உணர்வுகளைக்
கொன்றேன்.....
நீ என்னோடு
பயணித்த
அந்தக் குறுகிய
பயணத்தில்
தொலைந்தது
எல்லாமே திரும்பக்
கிடைத்திருக்கிறது
என் வாழ்க்கையைத்
தவிர....
அதை நான்
இந்த நொடியில்
உணர்ந்தேன்
இன்று
நீ பார்த்த பார்வைக்குள்
ஓழிந்திருந்த
உன் கேள்விக்கு
என்னிடத்தில்
இனிமேல்
பதில் இல்லையென்று....
அருள் நிலா வாசன் .

No comments:
Post a Comment