ஏழைகளின் குழந்தைகளை
உன் வாழ்வின்
கருவாக்கினாய்
எளியமுறை வாழ்க்கைதனை
உருவாக்கினாய்
என் எண்ணங்களில்
உன் சிந்தனையைப்
பொருளாக்கினாய்
அம்மா
நீ
என் பாதையினை
நல்வழியின்
தெருவாக்கினாய்
உன் நினைவுப் பூக்களின்
வாசனையில்
நான்
வழி நடந்து
அருளாகினேன்.
.
.
அருள்நிலா வாசன்
27.08.2016

No comments:
Post a Comment