எதிர்பார்க்காத
பொழுதொன்றில்
எதிரில் வந்த
பிரிவொன்றை
இடிவிழுந்த மேகங்களின்
இரக்கத்தில்
நனைந்தபடி
சந்தித்த பொழுது
உன் பரிவை
நான் எதிர் பார்க்கவில்லை ..
நீ வரம்பு கட்டி
வைத்திருந்தும்
வழி தவறி
வந்து
விழுந்த
வலி சுமந்த
வார்த்தைகளில்
அழிக்கமுடியாது
ஊறிப்போயிருந்த
உண்மைகள்
என்
உள்ளத்தில்
உளிகொண்டு
தாக்கி
என்னைப்
பழிவாங்கிய
கீறல்கள்
.
இனியும் ஒரு
சந்திப்பு
அது என்னோடு
இல்லை
ஏனென்றால்
என்
இதயம்
இப்போது
உயிரோடு
இல்லை...
.
.
.
அருள் நிலா வாசன்
10.08.2016 .

No comments:
Post a Comment