அயர்ந்து சோர்ந்த பொழுதுகளில்
நீயாகத் தேடி வருவாய்
துயரத்தைமட்டும்
துணிச்சலாய்ப் பகிர்வாய்
உனக்கு நிழலாய்
எப்பொழுதும்
நானிருந்தேன்
இருக்கும் பொழுதுகளில்
உரிமைபோல்
உருவி எடுத்தாய்
எழுந்து போனபொழுதில்
என்னிடம்
எதுவுமே சொல்லாமல்
போய்விட்டாய்
அப்பவும் இப்பவும்
எப்பவும்
நான் தனியாக
இருப்பதுமட்டும்
உனக்குத் தெரியாமல்
.
.
நீயும் மரம்தானா..?
4.10.2016
No comments:
Post a Comment