Tuesday, 4 October 2016

உன் நிழலாக எப்போதும்...

உன் விரல்தொட்டு
உன்னோடு வழிதொடரத்தான்
முடியவில்லை
என் நெஞ்சத் தூழியிலே
ஆடுமுந்தன் நினைவில்த்தான்
இப்போதும்
நெடுநேரம் தூங்குகின்றேன்
நான் திடுக்கிட்ட வேளையிலும்
உன்
விரல் பட்ட புதுமெட்டு
என் காதோடுதான்
உரச
நீமட்டும் இப்போது
தொலைவாகிப் போனாலும்
உன் நிழலாக
எப்போதும்
உன்னோடு தான்
நான் இருப்பேன்.
.
.
அருள் நிலா வாசன்

4,10,2016


                                                                .

No comments:

Post a Comment