- வாடைக்கு எடுத்துவிட்ட
வாகனம் போல
ஓடிக்கொண்டுருக்கு
வாழ்க்கை..
.. - பேசி வந்த கலியாணத்தைப்
பேட்டி கண்டது
காதல் கலியாணம்
நேசிக்கத் தெரியாவிட்டால்
வாசிக்கத் தெரியாத
வீணையை வீட்டிற்குள்
பூட்டி வைத்து
என்ன பலன் என்றது...
ஓடிப்போன காதல்
ஜோடி
திரும்பி வந்தது
சீதனம்
தேடி..
- திட்டிப் பார்த்தேன்
நீ
திருந்தவில்லை
திட்டியபின்
திரும்பிப் பார்த்தேன்
உன்னைக்
காணவில்லை
என் கட்டிய
மூச்சின்
காய வரிகளைக்
கேட்டதெல்ல்லாம்
.
.
என்னைக் கட்டி
அணைக்கும்
.
இந்தக்
காற்றுத்தான்....
.
.
No comments:
Post a Comment