Tuesday, 4 October 2016

குறும் கவிதைகள்

  • வாடைக்கு எடுத்துவிட்ட
    வாகனம் போல
    ஓடிக்கொண்டுருக்கு
    வாழ்க்கை..
    ..
  • பேசி வந்த கலியாணத்தைப்
    பேட்டி கண்டது
    காதல் கலியாணம்
    நேசிக்கத் தெரியாவிட்டால்
    வாசிக்கத் தெரியாத
    வீணையை வீட்டிற்குள்
    பூட்டி வைத்து
    என்ன பலன் என்றது...

  • ஓடிப்போன காதல்
    ஜோடி
    திரும்பி வந்தது
    சீதனம்
    தேடி..
  •  

  • திட்டிப் பார்த்தேன்
    நீ
    திருந்தவில்லை
    திட்டியபின்
    திரும்பிப் பார்த்தேன்
    உன்னைக்
    காணவில்லை
    என் கட்டிய
    மூச்சின்
    காய வரிகளைக்
    கேட்டதெல்ல்லாம்
    .
    .
    என்னைக் கட்டி
    அணைக்கும்
    .
    இந்தக்
    காற்றுத்தான்....
    .

.

No comments:

Post a Comment