கடந்து போன காலங்களின்
கண்ணிறைந்த காட்சியெல்லாம்
கரை காண வந்த அலைகள்போல
வந்து வந்து போகுது
நடந்து வந்த பாதையெல்லாம்
திரும்பிப் பார்க்கத் தோன்றும்போது
நமக்கென்று யாருமில்லையென்ற
நினைவு வந்து மோதுது
விரும்பி வாழ்ந்த வாழ்க்கையெல்லாம்
வீணாகிப் போச்சுதென்று - மனதில்
விட்டுப் போன கவலைகளும்
அரும்பி வந்து தாக்குது
பெற்றெடுத்த செல்வங்களுக்கு நான்
இப்போது செல்லாத காசுதான் - அவர்கள்
பேரின்பமாய் வாழ்ந்தாலும்
முதியோரில்லம்தான்
என் முதுமையின் முகவரி...
4.10.2016
திரும்பிப் பார்க்கத் தோன்றும்போது
நமக்கென்று யாருமில்லையென்ற
நினைவு வந்து மோதுது
விரும்பி வாழ்ந்த வாழ்க்கையெல்லாம்
வீணாகிப் போச்சுதென்று - மனதில்
விட்டுப் போன கவலைகளும்
அரும்பி வந்து தாக்குது
பெற்றெடுத்த செல்வங்களுக்கு நான்
இப்போது செல்லாத காசுதான் - அவர்கள்
பேரின்பமாய் வாழ்ந்தாலும்
முதியோரில்லம்தான்
என் முதுமையின் முகவரி...
4.10.2016
No comments:
Post a Comment