Tuesday, 4 October 2016

முதுமையின் முகவரி

     
கடந்து போன காலங்களின்
கண்ணிறைந்த காட்சியெல்லாம்
கரை காண வந்த அலைகள்போல
வந்து வந்து போகுது

நடந்து வந்த பாதையெல்லாம்
திரும்பிப் பார்க்கத் தோன்றும்போது
நமக்கென்று யாருமில்லையென்ற
நினைவு வந்து மோதுது
விரும்பி வாழ்ந்த வாழ்க்கையெல்லாம்
வீணாகிப் போச்சுதென்று - மனதில்
விட்டுப் போன கவலைகளும்
அரும்பி வந்து தாக்குது
பெற்றெடுத்த செல்வங்களுக்கு நான்
இப்போது செல்லாத காசுதான் - அவர்கள்
பேரின்பமாய் வாழ்ந்தாலும்
முதியோரில்லம்தான்
என் முதுமையின் முகவரி...

4.10.2016

No comments:

Post a Comment