ஒரு மூச்சுச்
திணறடித்து
திரும்பும் திசை
மறந்துவிட்டால்
கழற்றிவிட்ட
செருப்புக் கூட
வழித்துணைக்கு
வராது....
இனிக்குமிந்த
வாழ்க்கையென்று
இரவும் பகலும்
இருட்டடிக்கும்
இறுமாந்த
இன்பங்களின்
ஈர்ப்பு
பாவம்
புண்ணியம்
இரண்டிற்கும்
நடுவில்
இதுவரைக்கும்
இழுத்துவந்த
சுயமான
சுமைகளெல்லாம்
சூட்சுமமாய்
அவன்
கணக்கில்
தப்பாமல் விழும்
அதுதான்
இறுதியாய்
இறைவன் எழுதும்
உறுதியான
தீர்ப்பு.
.
.
அருள் நிலா வாசன்
4,10.2016
No comments:
Post a Comment