Tuesday, 4 October 2016

அவன் இதயத்தில்...

       
தோப்புக்குள்ளே
தேக்குமரம்
தனித்து நிற்பதென்ன
உன் ஏக்கத்தையே
பார்த்துப் பார்த்து
அழுது வடிப்பதென்ன
உன்னை
ஊக்குவித்துப்
பக்கத்திலே
ஊறி
நின்று
பாதியிலே
உறுதியானதென்ன

உருவான
காதலிங்கு
ஊற்றெடுத்து
ஓடியதைப்
பார்த்திருந்த
மரத்துக்கும்தான்
இரக்கம் வந்ததென்ன
மரத்துப்போன
அவனிதயத்தில்
உன்னை
மறந்தபின்னும்
ஓடுவது
ஈரமுள்ள
இரத்தம் தானா என்ன..?
.
அருள் நிலா வாசன்
4,10,2016

No comments:

Post a Comment