Tuesday, 4 October 2016

இழப்பதற்கு இனியெதுவுமில்லை

இழப்பதற்கு எதுவுமில்லை
உசிரு மட்டும்
இருப்பிருக்கு
ஈரவிழி நிறைஞ்சிருக்கு
இரக்கப்பட யாருமில்லை
இடர் படர்ந்த
வாழ்க்கையினைக்
கடந்து வந்த
பாதையெல்லாம்
நெரிஞ்சி முள்ளாய்
குத்திடிச்சு

காலுக்குச் செருப்பில்லை
காய்ந்த வயிற்றில்
பாலையூற்ற
சொந்தத்திற்கு விருப்பில்லை
கஷ்டத்தில் நானென்று
என்னைக் கழட்டிவிட்ட
பாச பந்தத்திற்கு
எந்தப் பொறுப்புமில்லை
பின்னடிக்குத் தேவையென்று
பிடித்து வைக்க நினைத்திருந்தால்
பிள்ளைகளைப்
படிக்க வைக்க
வட்டிகெடுத்த
பணத்திலேயே
பெரிய வீடு கட்டி
நானும்
வாடகைக்கு
விட்டே
என்
வயிற்றைக் கழுவியிருப்பேன்..
இழப்பதற்கு இனியெதுவுமில்லை
உசிரு மட்டும்
இருப்பிருக்கு....
.
4.10.2016

No comments:

Post a Comment