இழப்பதற்கு எதுவுமில்லை
உசிரு மட்டும்
இருப்பிருக்கு
ஈரவிழி நிறைஞ்சிருக்கு
இரக்கப்பட யாருமில்லை
இடர் படர்ந்த
வாழ்க்கையினைக்
கடந்து வந்த
பாதையெல்லாம்
நெரிஞ்சி முள்ளாய்
குத்திடிச்சு
காலுக்குச் செருப்பில்லை
காய்ந்த வயிற்றில்
பாலையூற்ற
சொந்தத்திற்கு விருப்பில்லை
கஷ்டத்தில் நானென்று
என்னைக் கழட்டிவிட்ட
பாச பந்தத்திற்கு
எந்தப் பொறுப்புமில்லை
பின்னடிக்குத் தேவையென்று
பிடித்து வைக்க நினைத்திருந்தால்
பிள்ளைகளைப்
படிக்க வைக்க
வட்டிகெடுத்த
பணத்திலேயே
பெரிய வீடு கட்டி
நானும்
வாடகைக்கு
விட்டே
என்
வயிற்றைக் கழுவியிருப்பேன்..
இழப்பதற்கு இனியெதுவுமில்லை
உசிரு மட்டும்
இருப்பிருக்கு....
.
4.10.2016
No comments:
Post a Comment