Monday, 10 October 2016

என்றோ ஒரு நாள்........



காணத் துடித்த
என் விழிகளுக்கு
ஒரு கோணத்தில்
நீ வருவதும்
போவதும்
தெரு ஓரத்தில்
தெரிகிறது

வீணாகிப் போகாது
நீ விண்ணப்பித்த
விடை தேடும்
காரணங்கள்
இடைவெளி கூடும்
நேரங்கள்
இரட்டிப்பாய்
நீழுகிறது
இழுத்து விடும்
என் சுவாசம்

பொழுது விடிந்தாலும்
இருட்டாகிக் கிடக்க
விழுந்து கொண்டுக்கும்
இலைகளைப் பிரிய
விரும்பாத
மரங்களின்
இலையுதிர் காலத்தில்

நேரத்தின் பின்
நேர்த்தியாய்
ஓடிக்கொண்டிருக்கிறது
என் வாழ்க்கை

என்றோ ஒரு நாள்
நீயும் நானும்
அதே இடத்தில்
அப்படியே சந்திப்போம்
என்ற நம்பிக்கையில்
இன்றும் ஓடுகிறது
என் கடிகாரம்
தன்
நம்பிக்கையோடு





No comments:

Post a Comment