Tuesday, 11 October 2016

உயிரே உனக்காக...

தூக்கம் கலைகிறது
துப்பட்டா நனைகிறது
நீ தொலைவாய்ப்
போனதனால்
...................

இனியெங்கே போவது
எனக்குத் தெரியவில்லை
இருட்டில் நானிருக்கிறேன்
எனக்கான ஒளியாக நீ
தனியாகத்
திரும்பி வரும்வரை

.............


காத்திருந்த கண்களுக்கு
நீ விருந்து வைக்கவில்லை
இருந்தாலும் பூத்திருக்கு
பொழுதொன்றில் வாடாமல்
வழியெங்கும் தேடாமல்
நம்பிக்கையில் பாத்திருக்கு
 
............
 
நீ வெளி நடப்பு செய்தது
என் இதயத்துக்கு தெரியாது
அது இப்போதும்
உன் வரவுக்காய்
தன் கதவைத்
திறந்து வைத்திருக்கிறது..
 

No comments:

Post a Comment