Sunday, 6 March 2016

காதல் ஜுரம் வந்திரிச்சு



சொல்லிப் பார்த்தேன்
உனக்கு
சொன்னதொன்றும்
புரியலயே

சொல்லாமல்
நான் விட்டும்
பார்த்தேன்
உன் சோலி
எனக்கு
தெரியலயே

சொட்டு சொட்டாய்
உதிர்ந்த மழையில்
சொந்தமாய்
வந்திடென்று
சொல்லச் சொல்லி
அனுப்பி
வைத்தேன்

நனைந்தாயா
தெரியலயே....???

நித்தம் நித்தம்
காதல் மழையில்
நனைந்ததனால்
எனக்கு

காதல் ஜுரம்
வந்திரிச்சு
கைவசம்
மருந்தும் இல்லை
கையோட கொண்டு வர......

அருள் நிலா வாசன்
06.03.2016                                                       

No comments:

Post a Comment