Sunday, 6 March 2016

நித்தமுந்தன் நினைவாலே.......

நித்தம் உந்தன் நினைவாலே
நித்திரையில்
புலம்புகின்றேன்
மொத்தமாய் நீதந்த
முத்தத்திலே
மூழ்கிவிட்டேன்


நீமட்டும்
கிடைத்துவிட்டால்
கொடிமலராய் நான்
படர்ந்திருப்பேன்


பூவிரியும் மாலையில்
உனக்காகக் காத்திருப்பேன்
மல்லிகை வாசத்திலே நான்
மடிசாய்ந்து தூங்கிடுவேன்


நானாக நானில்லை
உன்னை நம்பியே
வாழுமிந்த நாளெல்லாம்
நட்ட நடுநிசியில்
நனைகின்றேன்
பெருமழையில்
நித்தமுந்தன் நினைவாலே.......

.

அருள் நிலா வாசன்
06.03.2016                                                      


No comments:

Post a Comment