உன்னைக்
காணத் துடித்த
என்
கண்களுக்குள்
நம்பிக்கை வைத்தாய்
கண்ட பின்னர்
வாழ்வதற்காய்
கனவுகளைக்
கணக்கில் வைத்தாய்
காண வந்த காட்சி
எல்லாம்
என்
கனவாகிப்
போகுமென்று
கருக் கொண்ட
மேகங்கள்
கதை சொன்னபோது
கட்டி வைத்த
ஆசைகளை
அவிட்டு
கொட்டி விட்டேன்
கரைந்தே போகட்டும்
இனித் தேவை
இல்லையென்று........
அருள் நிலா வாசன்
06.03.2016

No comments:
Post a Comment