Friday, 4 March 2016

உன் கேள்விக்கு பதில் ~


ஓடித் திரிந்த
என் நாடித்துடிப்பு
ஒரு கணம்
அப்படியே நின்றது
வேடிக்கை பார்த்த
அத்தனை பேரும்
உன்னை
அடித்திருந்தால்
அதிசயமில்லை
பதிலாக
என்னைப் பார்வையால்
தள்ளி விழுத்தினர்

ஓடிப் போகலாமா
என்று நீ
கேட்டதுதான்
எனக்குக் கூட
வேடிக்கையாய்
இருந்தது..
பார்த்தவர் கண்களுக்கு
பதிவிரதை
நானென்று
எப்படித்தான்
நான் நின்ற இடத்தில்
நிரூபிப்பது..?
முதல் முதலாய்
உன் முகம்
இன்று தானே
எனக்கு
அறிமுகம்.....
உன் கேள்விக்கு
பதில்
உன்னிடம்தான்
இருக்கிறது
என் சுவாசக்
காற்றோடு
கலந்திருக்கும்
என்னுயிரில்
உயிர் நிலையாகக்
கலந்துவிடு
அதை நான்
உணர்ந்தால்
அப்போது
தெரிந்துவிடும்
.
.
04.02.2016
அருள் நிலா வாசன்        .

No comments:

Post a Comment