Sunday, 6 March 2016

உன் பெயரை உச்சரித்தால்.....

உன் பெயரை
உச்சரித்தால்

உதடுகள்
உதறுது

உன் மூச்சை
உணர்ந்து கொண்டால்
உள்ளமே
உருகுது

உன் காலடி
ஓசை மட்டும்
எனக்குள்ளே
கேட்குது

ஓடி வந்து
பார்த்தாலே
உன்
உருவம் தான்
தெரியுது

என் பெயருரோடு
இணைத்து
அழகு பார்த்தேன்
அது
ஒட்டிக் கொண்டது
என்னோடு

உன்
உத்தரவின்றி
என்னுள்ளே வந்த
உன் பெயர்தான்...........

அருள் நிலா வாசன்

06.03.2016                                                    



No comments:

Post a Comment