Tuesday, 29 March 2016

கடைசிவரை அதே குழப்பம்....


குழப்பத்தில
இருந்தாலும்
நான்
குறுக்கு வழிதேடி
கூசிக் கூசி போகயில

கட்டுமரம் பறக்குதென்று
கருங்குருவி
சொன்னதென்று
கடைசி வரை
நம்ப வைத்து
கண்ணைக் கட்டி
என்னை
காட்டில அலைய விட்டு

கண்ணதாசன் வரிகளை
கடைசிவரை
சொல்ல வைத்து
கண்ணே உன்னை
நான்
காந்தம் போல
இழுத்து வைத்து

கையுக்குள்ள
காப்பேனென்று
கதை கதையாய்
வசனம் பேசி
காணாமல் போயிட்டியே
கண்ணீரும்
கம்பலையுமாய்
காதல் வைரசுடன்
எனக்கு
கடைசிவரை அதே
குழப்பம்...............

அருள் நிலா வாசன்
29.03.2016                                     .

No comments:

Post a Comment