நாம்
அமர்ந்திருந்த
ஏகாந்தப்
பொழுதுகளில்
எமக்கிடையில்
ஒழிந்திருந்த
எத்தனையோ
விடயங்கள்
இரகசியமாய்
எழுந்து
நீளக்கால் வைத்து
எட்டிக் கடந்தே
போனது...
இடைவெளியில்
என் வழியில்
ஒரு வழியாய்
குறுக்கிட்ட
அந்தப்
பொல்லாத
வியாதியில்
இப்படித்தான்
இருக்குமென்று
என் தப்பாத
கணக்கில் நின்று
நான்
இறுக்கிப் பிடித்த
கணத்தில்
இம்சை
தாங்காமல்
கழன்று விழுந்த
அந்த முகத்தை
பார்க்கவே
சகிக்கவில்லை....
ஒற்றைப் பத்திரத்தில்
இரட்டைக் கையெழுத்து
எப்போது விழுமென்று
காத்திருந்த
கலியாணம்
எங்கள்
கண்ணில்
தெரியாமலே
கும்மிருட்டில்
ஓடியே போனது....
காத்திருந்து
கடைசியில்
உன்னைக்
கடந்து போன
வண்டிக்கு
கை நீட்டி
உன்
பயணத்தை
உல்லாசமாய்
தொடர்ந்தாலும்...
உன்னைக்
கண்டிஷன் போட்ட
காதல் மீது நீ
பெட்டிசம் போட்டாலும்
அந்த கண்ணீரில்
கரைந்து போன
காதலுக்கும்
உன் முகமூடிக்
காதல்
தெரியாமல்
இல்லை....
இதுவும் உன்னைக்
கடந்து
போகும்
மெதுவாகப் போ
வழுக்கி விழுந்திடுவாய்..
அருள் நிலா வாசன்.
22.12.2015
என் வழியில்
ஒரு வழியாய்
குறுக்கிட்ட
அந்தப்
பொல்லாத
வியாதியில்
இப்படித்தான்
இருக்குமென்று
என் தப்பாத
கணக்கில் நின்று
நான்
இறுக்கிப் பிடித்த
கணத்தில்
இம்சை
தாங்காமல்
கழன்று விழுந்த
அந்த முகத்தை
பார்க்கவே
சகிக்கவில்லை....
ஒற்றைப் பத்திரத்தில்
இரட்டைக் கையெழுத்து
எப்போது விழுமென்று
காத்திருந்த
கலியாணம்
எங்கள்
கண்ணில்
தெரியாமலே
கும்மிருட்டில்
ஓடியே போனது....
காத்திருந்து
கடைசியில்
உன்னைக்
கடந்து போன
வண்டிக்கு
கை நீட்டி
உன்
பயணத்தை
உல்லாசமாய்
தொடர்ந்தாலும்...
உன்னைக்
கண்டிஷன் போட்ட
காதல் மீது நீ
பெட்டிசம் போட்டாலும்
அந்த கண்ணீரில்
கரைந்து போன
காதலுக்கும்
உன் முகமூடிக்
காதல்
தெரியாமல்
இல்லை....
இதுவும் உன்னைக்
கடந்து
போகும்
மெதுவாகப் போ
வழுக்கி விழுந்திடுவாய்..
அருள் நிலா வாசன்.
22.12.2015

No comments:
Post a Comment