Tuesday, 22 December 2015

கூடு திரும்ப.....

கூட்டை விட்டுத்
தூரமாய்ப் பறந்த
கூண்டுப் பறவைகள் கூட
குமுறிக் குமுறி
அழும் சத்தம்
கொஞ்சமாய்
கேட்கிறது....


தோட்ட வெளியெங்கும்
பாடித் திரிந்த
குயில்களின்
தேசியப் பாடல்
எங்கோ
தெளிவில்லாமல்
தூரமாய் கேட்கிறது....

நெல் மணிகளைத்
கொத்தித் திரிந்த
புலுனிக் கூட்டம்
கடந்த காலத்தைக்
கனவாய் மறந்தா
வயல்களும்
வனப்பும்
எங்கே போனதென்று
ஏக்கமாய்க் கேட்கிறது..

வேம்பாய்க் கசக்கும்
வெடிகுண்டுச் சத்தங்கள்
கேட்கப் பயந்த
தோகை மயில்கள்
ஊருக்குள் திரும்பி
வரலாமா என்று
தொலைவாய் நின்று
கேட்கிறது.....

நரியும் பரியும்
நாட்டைக் கெடுத்தாலும்
கேள்விக் குறிகளின்
பதில்கள்
எல்லையைக்
குறிக்க
தம்பட்டம்
தானாய்
அடங்கும்
அவர்கள்
அவர்களாகவும்
நாங்கள்
நாங்களாகவும்
இருக்க
இயற்கை
இயல்பாய் வரும்...

அருள் நிலா வாசன்.
22.12.2015                                           .

No comments:

Post a Comment