புனித நாளொன்று
புதிதாய் பிறக்க
வாசல் திறந்து
உனக்காய்
ஒளி கொடுத்து
எரிந்து முடியும்
இந்த மெழுகுவர்த்தியின்
கடைசி மூச்சுக்குள்
என் கடைசி ஆசை
ஒழிந்து இருக்கிறது
உனக்கு தெரியாமல்
இருக்கலாம்....
என் காதைப் பிளிந்து
உன் கவனத்தில்
கடைந்தெடுக்கும்
சில்லறை
வார்த்தைக்குள்
வாளொன்று
இல்லாமல்
வெட்டும்
உன் வாய் பேச்சில்
கல்லறைக்குள்
அடங்கத் துடிக்கும்
என் சுவாசக் காற்று...
பூங்கோதைக்குள் ஒளிந்து
நீ வெளிச்சங்களை
இழுத்து மூடி
வெட்கத்தை
களட்டித் தூர
எறிந்துவிட்டு
வெறி கொள்ளும்
உன்
வழித்தடங்கள்
என்னை
நின்று
நெறிப்படுத்துகிறது..
கரைதொட்டு உடையும்
நீர் குமிழிகளாய்
என் இதயத்தின்
விழிம்பில்
உன் நினைவுப் பூக்கள்
மௌனத்தில்
விளையாடுகிறது...
ஊற்றாகி வழிந்து
ஓடும் உன் இசையாற்றில்
இன்னும் நான் வீழ்ந்து
கிடக்கின்றேன்
பாடும் நிலாவின்
நீழும் ஒளி காண
உன் பார்வை ஓரு நாளில்
மறுபடியும்
நின்மதியைத்
தேடி வரலாம்
உன் போதை
நிரந்தரமாய் தெளிந்த பின்...
அருள் நிலா வாசன்.
13.12.2015
உன் கவனத்தில்
கடைந்தெடுக்கும்
சில்லறை
வார்த்தைக்குள்
வாளொன்று
இல்லாமல்
வெட்டும்
உன் வாய் பேச்சில்
கல்லறைக்குள்
அடங்கத் துடிக்கும்
என் சுவாசக் காற்று...
பூங்கோதைக்குள் ஒளிந்து
நீ வெளிச்சங்களை
இழுத்து மூடி
வெட்கத்தை
களட்டித் தூர
எறிந்துவிட்டு
வெறி கொள்ளும்
உன்
வழித்தடங்கள்
என்னை
நின்று
நெறிப்படுத்துகிறது..
கரைதொட்டு உடையும்
நீர் குமிழிகளாய்
என் இதயத்தின்
விழிம்பில்
உன் நினைவுப் பூக்கள்
மௌனத்தில்
விளையாடுகிறது...
ஊற்றாகி வழிந்து
ஓடும் உன் இசையாற்றில்
இன்னும் நான் வீழ்ந்து
கிடக்கின்றேன்
பாடும் நிலாவின்
நீழும் ஒளி காண
உன் பார்வை ஓரு நாளில்
மறுபடியும்
நின்மதியைத்
தேடி வரலாம்
உன் போதை
நிரந்தரமாய் தெளிந்த பின்...
அருள் நிலா வாசன்.
13.12.2015

No comments:
Post a Comment