Saturday, 23 May 2015

தொலைவாய் கேட்கும் இதய ராகம்.....

நேற்றுவரை
நடந்ததெல்லாம்
நாளைவரை
இல்லையென்று
இன்றுவரை
தெரியவில்லை

உனக்கும்
எனக்கும்
இடையிலான
தனிமைப்
போராட்டத்தில்
தானாக
ஜெபிக்கிறது
தணியாத
அன்பு....

கடந்து வந்த
கரடு முரடான
பாதையில்
எப்போதும்
எனக்கு
ஊக்கம்
கொடுக்கும்
ஒரு இசைமட்டும்

அங்கு
இசைத்துக்
கொண்டே
இருக்கிறது
இன்று
தொலைவாய்
கேட்கும்
இதய ராகம்.....

23.05.2015







No comments:

Post a Comment