Wednesday, 13 May 2015

அப்படியே இருந்துவிடு

அடித்துத் துவைத்து
அழுக்கை எல்லாம்
உன்னில்
கழுவிக் காயப்
போட்டதெல்லாம்
வெள்ளையாகத்
தெரியும்

அடித்தவரும்
அடிக்கக் 
கொடுத்தவரும்
நோக்கமெல்லாம்
ஒன்றேதான்

இன்னொரு தடவை
உன்னை
அவர்களுக்குத்
தேவைப்படும் வரை
அப்படியே
இருந்துவிடு
சுத்தமான
சலவைக்கல்லாக......

அருள் நிலா வாசன்.
13.05.2015
                                                   

No comments:

Post a Comment