நீண்ட
அந்தப் பயணத்தில்
என்
அமைதியை
அடித்துப் பறித்த
அந்த சம்பவம்..
ஒரு வழிப்போக்கனாய்
இருந்த என்னை
வாரி இழுத்து
விழுத்தியது
வாழ்வா சாவா
என்று
விழுந்து கிடந்த
அந்தக்
குற்றுயிரை
காப்பாற்றும்
என் மனம்....
பின் விளைவுகளை
தெரியாமல்
பிடரி மண்டையில்
பலமாய்
அடி விழும்வரை
சுயனலமாய்
இருந்தவனைக்
காப்பாற்றுவதிலேயே
குறியாய்
இருந்தது
என் குற்றம்தான்.
சாட்சியமாய்
உண்மைகள்
இருமருங்கிலும்
பதுங்கியே
இன்னும்
ஒழிந்தே இருக்கலாம்.
யாருமே இல்லாமல்
வெறிச்சோடி
கிடக்கும்
பாதையில்
குற்றவாளியை
பக்கத்தில்
இருந்தே
பார்த்த
மரங்களுக்குள்
நெருடல்கள்
இப்பவும்
இருக்கலாம்...
23.05.2015

No comments:
Post a Comment