Sunday, 24 May 2015

உன்னோடு நான்

தொடரும் ஏக்கங்கள்
தூக்கத்தைக்
கலைக்க
தோட்டுச் சுரைக்குள்
ரகசியம்
கலக்க
தோற்றம்
அளிக்கிறது
தொலைவாய்
உன் முகம்...

தெளியும் நிலவில்
கலையும் மேகமாய்
வானில் எழுதும்
வண்ணக் கனவுகள்

இரவு முழுவதும்
பேசிக் கழைத்துப்
என் படுக்கை
விரிப்பில்
விடியும் வரைக்கும்
குட்டித் தூக்கம்
உன்னோடு நான்
கனாவிலே....

24.05.2015

No comments:

Post a Comment