தொடரும் ஏக்கங்கள்
தூக்கத்தைக்
கலைக்க
தோட்டுச் சுரைக்குள்
ரகசியம்
கலக்க
தோற்றம்
அளிக்கிறது
தொலைவாய்
உன் முகம்...
தெளியும் நிலவில்
கலையும் மேகமாய்
வானில் எழுதும்
வண்ணக் கனவுகள்
இரவு முழுவதும்
பேசிக் கழைத்துப்
என் படுக்கை
விரிப்பில்
விடியும் வரைக்கும்
குட்டித் தூக்கம்
உன்னோடு நான்
கனாவிலே....
24.05.2015

No comments:
Post a Comment