எப்பவும் போல
ஒரு கதவு
மூடினால்
இன்னொரு
கதவு
உனக்காகத்
திறக்கும்
நம்பிக்கை
என்னை
வாவென்று
அழைத்தது....
இரவு முழுவதும்
யன்னல் விழிம்பில்
தட்டிக் கொண்டிருந்த
மழைத் துளிகள்
யதார்த்தக் கதைகளை
அங்கேயே
விட்டுச் சென்றிருந்தது...
நிலவு
சூரியனுக்காய்
காத்திருந்த
நிசப்தம்
இரவைச்
சுருட்டி வைத்துப்
பகலை
விரிக்கத் தொடங்க....
எனக்குள் ஒழிந்திருந்த
அதே
நினைவுகள்
வெளியே
ஒலித்துக்
கொண்டிருக்கும்
ஒரு குரலில்
அதே பாடல்
வரிகளைக்
கேட்டு
கதவைத் திறந்தபோது
காற்று மட்டும்
தனியாக
உள்ளே நுழைந்தது......
அருள் நிலா வாசன்....
20.05.2015

No comments:
Post a Comment