Wednesday, 27 May 2015

உயிரின் உயிராகி

ஒன்றா இரண்டா
காரணம்
நூறு
சில 
காரியம்
வேறு
நீ கேட்டால் 
நான் சொல்வேன்
கேட்காவிட்டாலும்
நான் வெல்வேன்
நீ
இட்டுச் சென்ற
தடயங்கள்
இடைமறித்த
விடயங்கள்
தடம் பதித்த
ஈடில்லா
நேரத்தில்
விடை தேடும்
பயணங்கள்
திசை மாறிப்
போனாலும்
உயிரின் உயிராகி
ஊற்றெடுக்கும்
ராகங்கள்
இரவின் மடியில்
உன் நிழலின்
பிடியில்
இதயத்தை
மீட்டி
எப்போதும்
என் கூடப்   
பயணிக்கும்...
27.05.2015


No comments:

Post a Comment