Friday, 22 May 2015

எப்போதும் நான் இருப்பேன்

கண் போன
போக்கெல்லாம்
நீ போன
பொழுதெல்லாம்
உன் கூடவேதான்
நான் இருந்தேன்.

மழையென்றும்
வெய்யிலென்றும்
இடை வந்த போதும்
உன் வழிக்குத்
துணையாக
அப்போதும்
நான் இருந்தேன்

மேடுகளும்
பள்ளங்களும்
தடை போட்ட
பொழுதுகளும்
வீடுவரை சேரும்வரை
உன்னோடுதான்
நான் இருந்தேன்

சுமை எல்லாம்
தாங்கும்வரை
உன்
வலிதாங்கியே
உன் வழியெல்லாம்
நான் இருந்தேன்

களட்டி விட்ட
இடத்திலேயே
நீ என்னை
மறந்தாலும்
நீ
பூட்டிய
கதவிற்கு
வெளியே
எப்போதும்
நான் இருப்பேன்
உன் கால் செருப்பாக.....
22.05.2015

No comments:

Post a Comment