ஒரு தடவை படித்துப்பார்
என் இதயச்சுவரில்
நீ எழுதி
மாட்டியதை
நேரம் இருக்கும்போது
ஒரு தடவை
படித்துப்பார்
அது உன்
மறதிக்கு
மருந்து கொடுக்கும்
இன்னொரு தடவை
அப்படிச்
சொல்லாதே
இனியும் தாங்காது
என் இதயம்
உன் இதயத்தை
துல்லியமாய்
படம் பிடிக்கச்
சொல்லு
அதிலொரு பிரதியை
எனக்கும் கொடு
என் கல்லறையில்
உன் கடைசிப்
பரிசாகவே
அது என்னோடு
இருக்கட்டும்.......
No comments:
Post a Comment