Sunday, 14 June 2015

தெளிவாகத் தெரிகிறது

கிட்டிய தூரத்தில்
நீயிருப்பது
தெரிந்தாலும்
கைதட்டிக் கூப்பிட
ஒருபோதும்
முடிவதில்லை

ஒட்டியே வந்திருக்கச்
சொல்லியே
வைத்ததுபோல்
எங்கிருந்தோ
வந்திருந்து
எத்திசையும்
எதிரொலிக்க
ஒத்திகை பார்க்கும்
ஜோடிக்கிளிகளின்
ஜொள்ளுப் பாசையில்
அள்ளித் தெளிக்கிறது
அன்பின் வேதம்...

எட்டியே இருந்தாலும்
தொட்டுப் பேசாத
உன்னன்பின் 
வேதம் 
புதிதென்று
என்னுள்ளே
ஒரு,நாதம்
இன்றைக்கும்
எதிரொலிக்க...

வெட்டியே போட்டாலும்
ஒட்டிக் கொள்ளும்
உன் அன்பில்
நான் நனைந்து
உறக்கத்தைத்
தள்ளிவைக்கும்
உன் நினைவுப்
புள்ளிகளில்....

வெள்ளிப் பாத்திரத்தில்
வெளிச்சத்தில்
அடி தெரிய
விளிம்புவரை
அள்ளிவைத்தேன்..

தெளிவாகத் தெரிகிறது
தண்ணீரில்
உன் முகம்
நான் 
எட்டிப் பார்த்தபோது..

                                             .

No comments:

Post a Comment