Wednesday, 24 February 2016

யாருக்கு நான் பாரம்

தேடிவந்த அன்பு
இன்று தூரமாய்
போனதென்ன
சாலையோரம்
சருகுபோல
இருந்த என்னை
ஓடி வந்தே
அரவணைத்த
கள் வடிந்த
உள் நெஞ்சம்

தூசு படிந்த
உன்னிதய வாசலுக்கு
நான் துடைப்பமான
அந்நொடிப்பொழுது
உள்ளே நுழையவிட்டு
என் மனதை
ஊனமாக்கினாய்....

தெருத் தெருவாய்
தேடி பின்பு
வாடிப் போன
என் நெஞ்சம்
இன்று ஈரமாய்
விதைத்து வைத்த
வார்த்தைகள்
ஒவ்வொன்றாய்
முளைத்த பின்னும்
பிடுங்கி எடுக்க
நினைப்பதென்ன ....


சருகாக இருந்திருப்பேன்
சாலையோரம்
இன்னேரம்
யாருக்கு நான் பாரம்
.
.
23.02.2016    


No comments:

Post a Comment