Wednesday, 24 February 2016

மீண்டுமவள் குழந்தையாகிறாள்.

கருவறை கிழித்துப்
பெருவலி கொடுத்து
கூச்சலிட்ட
குழந்தை முகம்பார்த்து
பொக்கிஷமாயவள்
பெற்றவலி மறந்து
பொங்கியணைத்து
புது யுகமானாள்..


வேதனை மடியில்
இரவும் பகலும்
ஈடு கொடுத்து
இடையில் தாங்கி
நடைகள் மறந்து
தொடையில் தாங்கியும்
துன்பம் மறந்த அம்மா...


போதும் போதும்
என்றாகுமுன்னே
பொன்னும் மண்ணும்
பொலிவுற சேரும்
இனிதான வாழ்வும்
இணைத்தவள்
பாவி
பேரன் பேத்தியை
உயிராய் வளர்த்து
காலத்தோடு
கலந்தே
காற்றுப்போல
எடையும் குறைந்து
மீண்டுமவள்
குழந்தையாகிறாள்..

பிள்ளைகளேனோ
பிரிவினை காட்டி
முதியோர்
இல்லம் தேடுவதில்
முன்னோடிகளாக.....
.

.
23.02.2016      
  

No comments:

Post a Comment