திட்டிக் கொண்டே போன
மேகத்தை
தலை நிமிர்ந்தும் பார்க்காது
திடகாத்திரமாய்
திரும்பத் திரும்ப
திகிலூட்டும் ஓரிசையில்
எல்லோருக்கும்
எச்சரிக்கை
விட்டது..
ஊர்ந்து கொண்டே போன
உள் நோக்கத்துடன்
வந்தவனுக்கு
கவ்விப் பிடிப்பதில்
மட்டும் தான்
கவனமிருந்தது..
இழுத்துக் கொண்டே போன
நேரத்தைக் கணக்கிடாமல்
அங்கேயே
அகலக் கால் வைத்து
அணைத்து
உள்ளிழுத்து
உட்கார்த் துடித்தது
கோழி
தன்
வரவு செலவை
வாய் விட்டெண்ணிக்
கணக்குப் பார்க்கத்தான்....
.
.
23.02.2016

No comments:
Post a Comment