போதும் போதும் என்றேன்
நிறுத்தவில்லை
நீ பொறுமையிழந்து
பொழிந்தது
போதும்
இப்போதும் சொல்கின்றேன்
உனக்குள் இருப்பது
யாரென்று சொல்லு
அது என்பெயர்
இல்லையென்றால்
இப்போதும்
எப்போதும்
அதைக் கேட்கும்
துணிச்சல்
எனக்கில்லை
போதுமா.....?
இதுதான் காதல் வலியா...?
.
,
அருள் நிலா வாசன்.
16.02.2016 .

No comments:
Post a Comment